News April 15, 2024
நடப்பாண்டு பருவமழை இயல்பை விட அதிகரிக்கும்

இந்தியாவில் நடப்பாண்டு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், நீண்டகால அடிப்படையில் சராசரி மழைப்பதிவு 106% ஆக பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு பருவமழை அதிகரிப்பதற்கு, இந்திய பெருங்கடல் இருமுனை உருவாக்கம் மற்றும் பசிபிக் பகுதியில் உருவாகும் ‘லா நினா’ காரணமென வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Similar News
News January 23, 2026
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால், இன்று மாலை ரூபாய் மதிப்பு 54 பைசா சரிந்து ₹91.95-ஆக உள்ளது. இது, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News January 23, 2026
ஜெயலலிதா குறித்து PM மோடி சொன்ன வார்த்தை!

TN-ல் தற்போது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை அரசு தடுக்க தவறிவிட்டதாகவும் PM மோடி சாடியுள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதாவின் ஆட்சியில் குற்றங்கள் கட்டுக்குள் இருந்ததாகவும், அவர் தைரியமாக நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார். மேலும், போதைப்பொருள் மாஃபியா கும்பலிடம் மாணவர்களை திமுக ஒப்படைத்துவிட்டதாகவும் விமர்சித்தார்.
News January 23, 2026
மாம்பழம் சின்னம் யாருக்கு? அன்புமணி VS ராமதாஸ் மோதல்

NDA கூட்டத்தில் ‘மாம்பழம்’ சின்னம் இடம்பெற்றதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு அன்புமணி பதிலளித்துள்ளார். அதில் ECI தங்களுக்குதான் சின்னத்தை பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்துள்ளதாகவும், இதுகுறித்து ECI-யிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். சின்னம் தொடர்பான இந்த மோதல், வரும் நாள்களில் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


