News March 29, 2025

IPL 2025யை ‘இந்த’ அணி வெல்லும்! ஐஐடி பாபா கணிப்பு!

image

மகாகும்பமேளாவில் தோன்றி, IIT பாபா திடீரென வைரலாகினார். இவர், IPL 2025 தொடரை RCB அணி தான் வெல்லும் என கணித்துள்ளார். தொடரை வெல்லும் எனக் கூறியும் RCB ரசிகர்கள் புலம்பி தவிக்கின்றனர். விஷயம் என்னவென்றால், IIT பாபா CT தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தும் எனக் கணித்தார். ஆனால், அத்தொடரில் பாகிஸ்தான் ரொம்ப மோசமாக தோற்றது. அது ஞாபகம் வர, தற்போது RCB ரசிகர்கள் தவிக்கிறார்கள். யார் ஜெயிக்க போறாங்க?

Similar News

News April 1, 2025

இரவில் பல் துலக்குவது அவசியமா?

image

ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை எழுந்தவுடன் ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை. ஆனால், நம்மில் பலர் காலையில் பல் துலக்குவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், இரவு தூங்குவதற்கு முன் துலக்குவது மிக அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அப்போதுதான், நாம் சாப்பிட்ட உணவின் மிச்சங்கள் பற்களில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.

News April 1, 2025

கூந்தலை துண்டித்து போராட்டம்

image

கேரளாவில் தேசிய சுகாதாரப் பணியாளர்களின் (ASHA) போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ரிட்டயர்மென்ட் பெனிபிட், பணிநிரந்தரம், மருத்துவ வசதி, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கோரி அவர்கள், திருவனந்தபுரத்தில் கடந்த 50 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை ஏற்காத நிலையில், தங்கள் கூந்தலை வெட்டியும், மொட்டையடித்தும் இவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

News March 31, 2025

மும்பை அணி அபார வெற்றி…!

image

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 116 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மும்பையின் அறிமுக பௌலர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பையில், ரிக்கெல்டன்(62*) அதிரடியாக அரைசதம் விளாசினார். இதனால், அந்த அணி எளிதில் வெற்றிபெற்றது.

error: Content is protected !!