News October 4, 2025
சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த பொருள் போதும்

பாகற்காய் இலைகள் பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதில், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின், ஃபோலேட், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இது மலச்சிக்கலை குணப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சுகரை குறைக்கும். ஆனால், இதன் பலன்கள் ஒருவருக்கொருவர் வேறுபடும் என்பதால், சுகர் இருப்பவர்கள் மருத்துவர்களை கேட்டு இதை உணவில் சேர்க்கலாம் என கூறுகின்றனர். SHARE.
Similar News
News October 4, 2025
கடல் மாநாட்டுக்கு தயாரான சீமான்

ஆடு, மாடுகளின் மாநாட்டை நடத்தி முடித்த சீமான், அடுத்ததாக என்ன மாநாடு நடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அடுத்ததாக தருமபுரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் மாநாடு மற்றும் தஞ்சையில் தண்ணீர் மாநாடு நடத்த உள்ளதாக சீமான் பதில் அளித்துள்ளார். மேலும் கடல் மாநாடு தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள கடலுக்கு படகு மூலம் சென்று ஆய்வு செய்தார்.
News October 4, 2025
கரூர் துயரம்: அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

கரூர் துயரம் குறித்து ஐகோர்ட் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்களின்படி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஐகோர்ட் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் அரசின் பொறுப்பு உறுதிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
குழந்தைக்கு Cough Syrup கொடுப்பதற்கு முன்..

2 வயது வரை குழந்தைகளுக்கு Cough Syrup கொடுக்க வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனையின் படி Syrup கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், டாக்டர் பரிந்துரைக்கும் டோஸ் அளவில் மட்டுமே Syrup-ஐ கொடுக்க வேண்டும் எனவும் வெவ்வெறு மருந்துகளை ஒரே நேரத்தில் கொடுக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அனைவருக்கும் பகிருங்கள்.