News April 29, 2025
இந்த பாக். பெண் மட்டும் இந்தியாவில் இருப்பார்!

காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த சீமா ஹைதர் நாடு கடத்தப்படமாட்டார். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றாலும், இந்தியரை திருமணம் செய்து கொண்டதால், அவர் இந்திய நாட்டின் பிரஜையாகி விட்டார். இதன் காரணமாக சீமா இந்தியாவிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு பிரச்னையில் பாகிஸ்தானியர்களை வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 7, 2025
TN-ல் பெரியாரின் சமத்துவ தீபம் தான் எரியும்: CM

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரிவினையை ஏற்படுத்த பாஜகவினர் நினைப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மலிவான அரசியலை பாஜக செய்வதாக விமர்சித்த அவர், இந்த கூட்டம் குறித்து மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும் எனக்கூறினார். மதுரையில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் எப்போதும் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம் தான் எரியும் என குறிப்பிட்டார்.
News December 7, 2025
பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.
News December 7, 2025
வானில் இருந்து விழுந்த மர்ம சிவப்பு தூண்கள்.. PHOTOS!

வானில் இருந்து ரெட் கலர் தூண்கள் விழுவதை போல நிகழ்ந்த சம்பவத்தின் போட்டோதான் ட்ரெண்டிங். ஏதோ ஏலியன் ஸ்பேஸ்ஷிப்போ என கற்பனையை உலாவ விட வேண்டாம். இது ஒருவகை மின்னல். Sprites எனப்படும் இவை இடி மின்னலுடன் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 50-90 கிமீ உயரத்தில் தோன்றும். இத்தாலியில் நடந்த இந்த அதிசய வானிலை நிகழ்வின் போட்டோவை நீங்க மட்டும் பார்த்து ரசிக்காமல், நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


