News April 29, 2025

இந்த பாக். பெண் மட்டும் இந்தியாவில் இருப்பார்!

image

காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த சீமா ஹைதர் நாடு கடத்தப்படமாட்டார். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றாலும், இந்தியரை திருமணம் செய்து கொண்டதால், அவர் இந்திய நாட்டின் பிரஜையாகி விட்டார். இதன் காரணமாக சீமா இந்தியாவிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு பிரச்னையில் பாகிஸ்தானியர்களை வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 26, 2025

செங்கோட்டையன் ராஜினாமா செய்தது ஏன்?

image

பொதுவாக ஒரு கட்சியில் MLA-வாக இருப்பவர், பதவியை ராஜினாமா செய்யாமல் வேறு கட்சிக்கு தாவினால் சிக்கல் ஏற்படும். கட்சித் தாவல் தடைச் சட்டப்படி சபாநாயகர் அந்நபரை தகுதி நீக்கம் செய்யலாம். எனவேதான் KAS தன்னுடைய MLA பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதேபோலதான் 2017-ல் தினகரன் ஆதரவு அதிமுகவினர் 18 பேரை இச்சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்திருந்தார்.

News November 26, 2025

₹6 செலுத்தினால் ₹1 லட்சம் கிடைக்கும் திட்டம்

image

போஸ்ட் ஆபீஸ் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ திட்டத்தில், 1 நாளைக்கு ₹6 பிரீமியமாக செலுத்தினால் 5 வருடங்கள் கழித்து ₹1 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பதால் அவர்கள் பெயரில்தான் கணக்கு தொடங்கமுடியும். இதற்கு, குழந்தைகள் 5-20 வயதிற்குள்ளேயும், பெற்றோர்கள் 45 வயதிற்கு மிகாமலும் இருக்கணும். இந்த திட்டத்தை தொடங்க அருகில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு போங்க. SHARE.

News November 26, 2025

BREAKING: ₹1,000 மகளிர் உரிமை தொகை.. வந்தது HAPPY NEWS

image

விடுபட்டவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமை தொகை ₹1000 வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களும் பயன்பெறும் வகையில் அரசு சில தளர்வுகள் வழங்கியது. இதை பயன்படுத்தி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்து காத்திருந்த நிலையில், இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!