News January 4, 2025

இனி இதற்கு பெற்றோர் அனுமதி தேவை

image

இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதள கணக்கை தொடங்குவதற்கு பெற்றோரின் அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு வெளியிட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளில் கூறியுள்ளது. கணக்கு துவங்கப்படுவதற்கு முன்னர் இதனை வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆஸி.,யில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 12, 2025

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

image

திருமண மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சீமான் மன்னிப்பு மனுவை சமர்ப்பிக்காவிட்டால், வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடித்துக் கொண்டிருந்த போதே, திருமண ஆசை காட்டி ஏமாற்றியவர், பொதுவெளியில் அவதூறாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நடிகை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

News September 12, 2025

கதறும் Employees.. எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்!

image

வேலை செய்யும் 88% இந்தியர்களுக்கு லீவு கிடைக்காமல், நேர வரைமுறையின்றி வேலை செய்வதாகவும், பொது விடுமுறையிலும் வேலை செய்ய நிறுவனங்கள் வலியுறுத்துவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. வேலை நேரத்தில் டீ பிரேக் கூட கிடைப்பதில்லையாம். வீட்டுக்கு சென்ற பிறகு போன் வந்து அதனை எடுக்காமல் விட்டால், Promotion கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் 79% பேர் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கும் ரெஸ்ட் வேண்டாமா..?

News September 12, 2025

கோவையில் நிலம் வாங்கியது உண்மை: அண்ணாமலை

image

கோவையில் விவசாய நிலம் வாங்கியது உண்மை தான் என அண்ணாமலை கூறியுள்ளார். இயற்கை விவசாயம் செய்ய தங்களது ‘We The Leaders’ அறக்கட்டளை மூலம் கடந்த ஜூலை 12-ம் தேதி நிலம் வாங்கப்பட்டதாகவும், பத்திரப்பதிவு கட்டணமாக ₹40,59,220 செலுத்தியுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். ₹85 கோடி மதிப்பிலான நிலத்தை ₹4.5 கோடிக்கு சட்டவிரோதமாக அவர் வாங்கியுள்ளதாக சோஷியல் மீடியாவில் பலரும் விமர்சித்து வந்தது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!