News November 23, 2024
நயனை ஆதரிக்க இதுதான் காரணம்: பார்வதி

தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவிற்கு ஆதரவளித்தது ஏன் என நடிகை பார்வதி விளக்கம் அளித்துள்ளார். சுயமாக வளர்ந்த நயன், இப்படி ஒரு பகிரங்க கடிதத்தை காரணம் இல்லாமல் எழுதியிருக்க மாட்டார். சுற்றியுள்ளவர்களின் ஆதரவு கிடைக்காத போது ஒருவருக்கு எப்படி இருக்கும் என்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் தானும் அதுபோன்ற சம்பவங்களை கடந்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News December 4, 2025
100-ல் 100 அடிப்பாரா விராட் கோலி?

அனைத்து தரப்பு கிரிக்கெட்டையும் சேர்த்து கோலி 100 சதங்களை விளாசுவார் என ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். சதங்களின் சக்கரவர்த்தி என கோலியை புகழ்ந்து பேசிய ஆகாஷ் சோப்ரா, 2027 ODI WC உள்பட இன்னும் ஏறக்குறைய 40 போட்டிகள் கோலி விளையாடலாம் என்பதால், அவர் நிச்சயம் 100 சதங்களை எட்டுவார் என கூறியுள்ளார். தற்போது கோலி 84 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதிப்பாரா கிங்?
News December 4, 2025
மத நம்பிக்கையை தடுப்பது நல்லிணக்கமா? கோர்ட்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் உத்தரவிற்கு எதிராக TN அரசின் மேல்முறையீடு வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதை விசாரித்த மதுரை கோர்ட், ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கமாகும் என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தீபம் ஏற்றுவதை ஏன் ஒரு தரப்பு தடுக்க வேண்டும் என கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து ஆலோசிக்க சென்றுள்ளனர்.
News December 4, 2025
பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படுமா?

பாமகவும், மாம்பழ சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு டெல்லி HC-ல் நடந்துவருகிறது. பதவிக்காலம் முடிந்தும் அன்புமணியை தலைவர் என ECI அங்கீகரித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு சொல்கிறது. இதனால், இவ்வழக்கில் தற்போதைக்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை. ஒருவேளை தேர்தல் வரை இப்பிரச்னை தொடர்ந்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம் எனவும், இது இருதரப்புக்கும் பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


