News April 21, 2024
வாக்கு சதவீதம் மாறுபட இதுதான் காரணம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதத்தில் அடுத்தடுத்து பெருமளவில் வேறுபாடுகள் ஏற்பட்டது, வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அவசரம் காரணமாக அனைத்து தொகுதிகளிலும் முதலில் போன் மூலம் மாதிரி தகவலே பெறப்பட்டது. அதனால், இறுதித் தகவலில் வேறுபாடு ஏற்பட்டதாகவும், குளறுபடி எதுவும் நடைபெறவில்லை எனவும் விளக்கமளித்தார்.
Similar News
News November 12, 2025
4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
News November 12, 2025
நீண்ட ஆயுளுடன் வாழ இதை செய்யுங்க!

மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், நமது உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நோய்களை தவிர்த்து உடல்நலத்தை பேண சில செயல்முறைகளை வேண்டியது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகை செய்தன. அதனை தற்போது நகர்ப்புறங்களிலும் எளிதாக பின்பற்றலாம். அவற்றை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News November 12, 2025
இனி SMS-களுக்கும் கட்டணம்!

கோடாக் மகிந்திரா வங்கியில் மினிமம் பேலன்ஸாக ₹10,000 வைத்திருக்க வேண்டும். அதை பராமரிக்காமல் இருந்தால், மாதத்திற்கு 30 SMS மட்டுமே இலவசம் என அந்த வங்கி அறிவித்துள்ளது. 30 SMS-களுக்கு பிறகு, ஒரு SMS-க்கு ₹0.15 வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. வரும் டிச.7 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. UPI, ATM, செக் டெபாசிட், டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனை என அனைத்து SMS-களுக்கும் இது பொருந்தும்.


