News March 30, 2025
வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான இடம் இதுதான்..

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரிக்கா உள்ளதாக அமெரிக்காவின் Zutoby சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பட்டியலில், இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில், வாகனம் ஓட்டுவதற்கான மிகவும் பாதுகாப்பான நாடாக நார்வே உள்ளது. உலகளவில், கடந்த ஆண்டை (8.9 %) விட இந்த ஆண்டு (6.3 %) சாலை விபத்துகளின் சராசரி எண்ணிக்கை குறைந்திருக்கிறதாம். உங்க ஊரு ரோடு எப்படி இருக்கு?
Similar News
News January 19, 2026
எதிர்ப்பையும் மீறி CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

திருப்போரூரில் ₹342.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மாமல்லன் நீர்தேக்கத்திற்கு CM அடிக்கல் நாட்டினார். சுமார் 4,376 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ளநீரை சேமிக்கும் வகையில் இது அமைய உள்ளது. இந்த நீர்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படும் என்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், CM இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
News January 19, 2026
பொங்கல் ரிலீஸ் படங்களின் ரிப்போர்ட் என்ன?

இந்த பொங்கலுக்கு வெளியான பெரிய பட்ஜெட் படமான சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ கலவையான விமர்சனங்களை பெற்றது. 9 நாள்களில் இந்த படம் உலகளவில் ₹84 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற கார்த்தியின் ‘வா வாத்தியார்’ 5 நாள்களில் ₹12.5 கோடியை வசூலித்துள்ளதாம். சர்ப்ரைஸ் என்ட்ரியாக நுழைந்த ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் இதுவரை ₹11 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம்.
News January 19, 2026
BIG NEWS: விஜய் மீது CBI வழக்கு.. டெல்லியில் பரபரப்பு

கரூரில் 41 பேர் பலியான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரை சேர்க்க CBI திட்டமிட்டுள்ளதாம். 2 நாள்கள் விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இந்த முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் காவல் நிலைய FIR-ல் புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோர் பெயர்கள் உள்ளன.


