News March 20, 2024

உலகின் மிக மகிழ்ச்சியான நாடு இதுதான்

image

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வருடாந்திர பட்டியலை நேற்று ஐநா வெளியிட்டது. இதில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலியா 10, இங்கிலாந்து 20, அமெரிக்கா 23, ஜெர்மனி 24, சீனா 64, ரஷ்யா 70 ஆகிய இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவை (126) முந்தி பாகிஸ்தான் 108ஆவது இடத்தில் உள்ளது.

Similar News

News September 16, 2025

மேகாலயாவில் 8 அமைச்சர்கள் ராஜினாமா

image

மேகாலயா அமைச்சரவையில் மாற்றம் நிகழவுள்ளதால் அதற்கு ஏதுவாக, 8 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அம்மாநிலத்தின் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சரவையில், 8 புதிய அமைச்சர்கள் ராஜ் பவனில் மாலை 5 மணிக்கு பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்ட அமைச்சர்கள் கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

News September 16, 2025

துணை ஜனாதிபதியை சந்தித்தார் இபிஎஸ்

image

டெல்லியில் துணை ஜனாதிபதியை இபிஎஸ் சந்தித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், சிபி ராதாகிருஷ்ணனுக்கு பூங்கொத்து கொடுத்து துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பில் கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளார்.

News September 16, 2025

யுவராஜ், உத்தப்பாவுக்கு ED சம்மன்!

image

சட்ட விரோத சூதாட்ட விளம்பர வழக்கில் முன்னாள் கிரிக்கெட்டர்கள் யுவராஜ் சிங் & ராபின் உத்தப்பாவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. அதில், உத்தப்பா வரும் 22-ம் தேதியும், யுவராஜ் சிங் வரும் 23-ம் தேதியும் நேரில் ஆஜராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் வீரர்கள் சுரேஷ் ரெய்னா & ஷிகர் தவான் உள்பட நடிகைகள் மிமி சக்ரபோர்த்தி, ஊர்வசி ஆகியோரும் விசாரிக்கப்பட்டிருந்தனர்.

error: Content is protected !!