News February 24, 2025
வங்கதேச வரலாற்றில் இதுவே முதல்முறை

வங்கதேசம் உருவான பிறகு, முதல்முறையாக பாகிஸ்தானுடனான நேரடி வர்த்தகத்தை அந்நாடு தொடங்கியுள்ளது. கிழக்கு பாகிஸ்தானாக இருந்த அந்த நாடு, 1971ல் இந்தியா உதவியுடன் பிரிக்கப்பட்டது. தற்போது முதல்முறையாக பாகிஸ்தானின் சரக்கு கப்பல் வங்கதேசம் செல்ல உள்ளது. ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு, அந்நாடு பாக். பக்கம் சாய்ந்து வருகிறது. முன்னதாக ராணுவ ஒத்துழைப்பு குறித்து இருநாடுகளும் விவாதித்தன.
Similar News
News February 24, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி சென்ற ஆண்டு மட்டும் 30 கோடி ரூபாய்க்கு மேல் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பணத்தை இழந்துள்ளனர். இணைய வழி மூலமாக வருகின்ற விளம்பரங்களை நம்பி எந்த ஒரு பங்கு வர்த்தகம் மற்றும் பணத்தை முதலீடு செய்யும் செயலில் இறங்கி பணத்தை இழக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.
News February 24, 2025
₹1000 மகளிர் உரிமைத் தொகை.. தகுதியான பயனாளிகள் நீக்கம்?

மகளிர் உரிமைத்தொகை பெற்றுவந்த தகுதியான பயனாளிகள், திடீரென நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிக வருமானம் பெறுவோர் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், தகுதியானவர்களுக்கு நிறுத்தப்பட்டது ஏனென்று கேள்வி எழுப்பும் பாதிக்கப்பட்டோர், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்தும், காரணத்தையும் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.
News February 24, 2025
நியூசி.,க்கு 237 ரன்கள் டார்கெட்

ICC Champions Trophy: இன்று நியூசி.,க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 77 ரன்கள் குவித்தார். அவர் மட்டும் நிலைத்து நிற்காமல் இருந்திருந்தால் அந்த அணி 200 ரன்களுக்கு கீழ் தான் இருந்திருக்கும். அதே நேரம், நியூசி., அணியில் அசத்தலாக பந்துவீசிய மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.