News March 19, 2025
இதுதான் எனது ஒரே இலக்கு: ஸ்ரேயஸ் ஐயர்

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராஃபியை வெல்வதே தனது இலக்கு என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும். சீசன் முடிவில் ஒரு பஞ்சாபி கொண்டாட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News September 20, 2025
இந்தியாவுக்கு பெரிய எதிரிகளே இல்லை: PM மோடி

உலகில் இந்தியாவுக்கென பெரிய எதிரிகள் யாரும் இல்லை என குஜராத்தில் PM மோடி கூறியுள்ளார். மற்ற நாடுகளை சார்ந்து இருப்பது தான் நமது நாட்டின் பலவீனம் என தெரிவித்த அவர், மற்ற நாடுகளுக்கு முன் இது நமது சுயமரியாதையை சீர்குலைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து பொருள்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
News September 20, 2025
இட்லி, தோசைக்கு 5% GST, சாப்பாத்திக்கு No GST!

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்பது தமிழக அரசியலின் மையக் கருத்தாக இருந்துவரும் நிலையில், GST வரிவிதிப்பு இதை குறிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். வடமாநில உணவுகளான சப்பாத்தி, பரோட்டாவுக்கு GST-ல் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சூழலில், தென்னிந்தியர்கள் விரும்பி சாப்பிடும் இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவை 5% GST பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏன், இந்த பாரபட்சம் எனக் கேட்கின்றனர். உங்க கருத்து?
News September 20, 2025
மிரட்டி பாக்குறீங்களா CM சார்? விஜய்

திருச்சி, அரியலூரில் பவர் கட் செய்த திமுக அரசு, RSS தலைவர்கள், மோடி, அமித்ஷா ஆகியோர் வந்தால் இவ்வாறு செய்யுமா என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். நாகையில் பேசிய அவர், பஸ்ஸுக்குள்ளேயே தான் இருக்கணும், கையை இவ்வளவுதான் தூக்கனும் என்று காமெடியான ரூல்ஸ் போடப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், மிரட்டி பாக்குறீங்களா CM சார்? என்று நேரடியாக கேட்ட அவர், அதுக்கு விஜய் ஆளு இல்ல என்று பேசினார்.