News September 21, 2025
இதுதான் இந்தியாவின் ஒரே எதிரி: PM மோடி

பிற நாடுகளை சார்ந்து இருப்பதுதான் இந்தியாவின் ஒரே எதிரி என PM மோடி தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை பிறநாடுகளின் கைகளில் ஒப்படைக்க முடியாது, சுயசார்பை அடைவதுதான் இதற்கான ஒரே மருந்து என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரிவிதிப்பு மற்றும் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் H1B விசாவிற்கான கட்டணத்தை 2 மடங்காக டிரம்ப் உயர்த்தியதற்கு மத்தியில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
சபரிமலையை மேம்படுத்த ₹1,000 கோடி

சபரிமலை வளர்ச்சி பணிகளுக்காக மாஸ்டர் பிளான் திட்டம் வகுக்கப்பட்டு, ₹1,000 கோடி செலவிடப்படும் என கேரளா CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஆன்மிக மற்றும் சன்னிதானத்தின் கலாசார புராதனங்களை பாதிக்காத வகையில், 2039-க்குள் இந்த வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், சபரிமலை ரயில்வே, விமானநிலையம், ரோப்கார் சேவை என பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
News September 21, 2025
BCCI-ன் அடுத்த தலைவர் இவர் தானா?

BCCI தலைவர் தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் மிதுன் மன்ஹாஸ் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இவரே அடுத்த BCCI தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. J&K கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றிய மிதுன், IPL-ல் டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல அணி நிர்வாகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
News September 21, 2025
2034 வரை மோடி தான் PM வேட்பாளர்: ராஜ்நாத் சிங்

2034 வரை மோடி தான் பாஜகவின் PM வேட்பாளர் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1980 முதல் மோடியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அவரைப் போன்ற மக்களிடம் நெருக்கமாக தொடர்பில் இருக்கும், பிரச்னைகளை எளிமையாக அணுகும் ஒரு தலைவனை இதுவரை பார்த்ததில்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், சர்வதேச பிரச்னைகளுக்கு உலக நாடுகளின் தலைவர்களே PM மோடியுடன் ஆலோசனை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.