News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 29, 2025

காஷ்மீர் முன்னாள் CM வீட்டு சிறையில் அடைப்பு

image

காஷ்மீரில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்த அம்மாநில முன்னாள் CM மெஹ்பூபா முஃப்தி, அவரது மகள் இல்திஜா முஃப்தி, தேசிய மாநாட்டு கட்சி MP அகா சையத் ருஹுதுல்லா மெஹ்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல், மாணவர் சங்க தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

News December 29, 2025

திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்: பிரபாஸ்

image

பிரபல நடிகர் பிரபாஸ் 46 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பட்டது. அதாவது பிரபாஸை மணக்க விரும்பும் பெண்ணுக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என கேட்கப்பட்டது. அதற்கு, அந்த உண்மை தெரியாமல்தான் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என பிரபாஸ் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

News December 29, 2025

புது நாடு உதயம்.. முதல் நாடாக அங்கீகரித்த இஸ்ரேல்!

image

சோமாலியாவில் இருந்து பிரிந்து தன்னாட்சியுடன் செயல்பட்டு வரும் சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. மேலும் சுகாதாரம், டெக்னாலஜி என பல துறைகளில் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதை சோமாலியா, ஆப்பிரிக்க, ஐரோப்பிய யூனியன்கள், அரேபிய நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. 1991-ல் நடந்த உள்நாட்டு போரால் பிரிந்த சோமாலிலாந்தை தனது நாட்டின் ஒரு அங்கமாக சோமாலியா கருதி வருகிறது.

error: Content is protected !!