News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 6, 2025

பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆசிரியருக்கு அதிரடி தண்டனை

image

குன்னூரில் கடந்த 2023-ல் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இசை ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இசைப் பயிற்சிக்கு சென்ற மாணவியை, ஆசிரியர் பிரசாந்த் ரேப் செய்த நிலையில், மாணவி கர்ப்பமானார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த கோர்ட், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ₹2 லட்சம் நிவாரணம் அளிக்கவும் TN அரசுக்கு உத்தரவிட்டது.

News December 6, 2025

அவர்களின் இலக்கு நேரு அல்ல: சோனியா காந்தி

image

சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள், நேருவை நாட்டின் எதிரியாக கட்டமைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக சோனியா காந்தி சாடியுள்ளார். நேருவை வரலாற்றில் இருந்து நீக்குவது அவர்களது முக்கிய இலக்கு அல்ல. அவர் ஏற்படுத்திய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை சிதைப்பதுதான் இலக்கு. நேருவை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது என்பது வேறு, இது வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

image

<>+2 மாணவர் கொலையை சுட்டிகாட்டி<<>>, மாணவர் சமுதாயம் எங்கே போகிறது என்ற கேள்வியை அன்புமணி முன் வைத்துள்ளார். ஆசிரியர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருப்பதும் இதுபோன்ற நிகழ்வுக்கு காரணம் எனவும், இது மாணவர்கள் நலனுக்கும் உதவி செய்யாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கவனச் சிதறல்களைத் தடுக்க பாடங்களுடன் பிற கலைகளும் கற்பிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!