News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 18, 2025
சபரிமலையில் இதுவரை ₹210 கோடி வருமானம்

சபரிமலையில் நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடை திறந்து இதுவரை ₹210 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரவணை விற்பனை மூலம் ₹106 கோடி கிடைத்துள்ளதாகவும், மொத்த வருவாய் கடந்த ஆண்டைவிட 30% அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. தங்கும் அறைகளுக்கு முன்பணம் செலுத்திய பக்தர்கள் அதனை பெற தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாம்.
News December 18, 2025
வரலாற்றில் இன்று

*1822 – தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர் பிறந்தநாள்.
*1856 – நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் பிறந்தநாள்.
*2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர்.
*2006 – ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
News December 18, 2025
தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை மாஃபியா: HC

கனிமவள கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை HC-ன் உத்தரவுபடி TN அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசியல், பணபலத்தை வைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தமிழகத்தில் மாஃபியா போல் செயல்படுவதாக கோர்ட் தெரிவித்தது. மேலும் ₹5 கோடிக்கு கனிமவளம் கொள்ளையடிப்படும் நிலையில், ₹5 லட்சம் அபராதம் விதிப்பதில் என்ன பயன் என்றும் HC கேள்வி எழுப்பியுள்ளது.


