News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 21, 2026
14 மாவட்டங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள்

நேற்று சட்டபேரவையில் ஆளுநர் ரவி உரையில், தமிழ்நாட்டில் மேலும் 14 மாவட்டங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாவட்டங்கள்: மதுரை, திருச்சி, ஓசூர், காரைக்குடி, விருதுநகர், நெல்லை, குமரி, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை கரூர், ஊட்டி, நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகியவை. ஏற்கெனவே 7 மாவட்டங்களில் டைடல் பூங்கா நிறுவப்பட்டுள்ளது.
News January 21, 2026
சாப்பிடும்போது பேசுகிறீர்களா? இது உங்களுக்குதான்!

சாப்பிடும்போது பேசுவது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாய் வழியாக வயிற்றில் அதிகப்படியான காற்று நுழைவது ஏப்பம் மற்றும் வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். உணவு, உணவுக்குழாயில் செல்வதற்கு பதிலாக மூச்சுக்குழாய்க்குள் சென்று கடுமையான இருமலை ஏற்படலாம். சரியாக மெல்லாததால், செரிமான சாறுகள் உணவில் கலக்காமல், அமிலத்தன்மை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
News January 21, 2026
TCL உடன் கைகோர்த்த சோனி

சோனி தனது டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் பிரிவை மேம்படுத்த சீன நிறுவனம் TCl உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இதில் TCL 51% பங்கையும், சோனி 49% பங்கையும் வைத்திருக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டுத் முயற்சியின் மூலம் Sony Bravia டிவி தயாரிப்பு, விற்பனை மற்றும் பிற செயல்பாடுகளை உலகமெங்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


