News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 25, 2026

தொகுதிகள் மாறும் 3 முன்னாள் அமைச்சர்கள்

image

அதிமுக EX அமைச்சர்கள் 3 பேர் தொகுதி மாறுகின்றனர். 2021-ல் விழுப்புரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த சி.வி.சண்முகம், தற்போது மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், 2021-ல் அக்ரி கிருஷ்ணமூத்தி 2021-ல் போளூரில் வெற்றிபெற்ற போதிலும், தற்போது கலசபாக்கம் தொகுதிக்கும், ராஜபாளையம் தொகுதியில் வெறும் 3,708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜேந்திர பாலாஜி, சிவகாசி தொகுதிக்கும் மாறுகின்றனர்.

News March 25, 2026

காங்கிரஸில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

image

காங்கிரஸில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் EPS-க்கு அமோக ஆதரவு இருப்பதால் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்ததை பலரும் விரும்பவில்லை; கட்சியிலிருந்து வெளியேற நினைக்கின்றனர் என <<19471228>>ஆதவ் அர்ஜுனா<<>> இன்று காலை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2026

3 மாத கருவை ஃப்ரிட்ஜில் வைத்த தம்பதி.. SHOCK

image

ஃப்ரிட்ஜில் உணவு பொருள்களுக்கு நடுவே அழுகிய நிலையில் ஒரு சிசு கண்டெடுக்கப்பட்ட அருவருப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவின் திரிச்சூரில் 3 மாத கர்ப்பிணியின் கரு கலைந்துள்ளது. அவர் நர்ஸ் என்பதால் தொப்புள் கொடியை அறுத்து கருவை எடுத்துள்ளார். பின்னர், என்ன செய்வதென்று தெரியாமல் தம்பதி இருவரும் அதை ஃப்ரிட்ஜில் வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸுக்கு தகவல் கிடைக்க, தம்பதி மீது வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!