News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 19, 2026

மயிலாடுதுறை: மருந்தை தின்று ஆடுகள் பலி

image

கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணி இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனக்கு சொந்தமான 9 ஆடுகளை அருகில் உள்ள வயலில் நேற்று மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். அப்போது ஆடுகள் அந்த இடத்திலேயே இறந்து கிடந்துள்ளன. அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பன்றிகளை கொல்வதற்காக வைத்த குருணை மருந்தை ஆடுகள் தின்றதால் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News January 19, 2026

குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவிப்பு

image

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, வேட்டி, சேலை, முழுக் கரும்பு ஆகிய தொகுப்பு வழங்கப்படவுள்ளன. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

News January 19, 2026

21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

image

வாழைப்பழங்களிலேயே செவ்வாழையில் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.

error: Content is protected !!