News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 31, 2026
சுங்க கட்டண உயர்வு மக்களை சுரண்டும் செயல்: காங்கிரஸ்

<<19520486>>சுங்க கட்டணம் <<>>உயர்வால் அத்தியாவசியப் பொருள்களில் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. செலுத்திய கட்டணத்திற்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயல் எனவும் சாடியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உயரும் சுங்கக் கட்டணத்தால், மாநிலப் போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் எனவும் கூறியுள்ளது.
News March 31, 2026
கடன் தள்ளுபடி.. சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி செய்தி

இன்றைய திருவாரூர் தேர்தல் பிரசாரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி (அ) வட்டி தள்ளுபடி தொடர்பான வாக்குறுதியை ஸ்டாலின் வெளியிடுவார் என நம்புகிறோம் என்று CPM மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்த்த நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் வெளியிடவில்லை. அதேநேரம், கூட்டுறவு வங்கி பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
News March 31, 2026
விஜய்யின் ரோடு ஷோவுக்கு NO சொன்ன ECI

<<19524417>>திருச்சி கிழக்கில்<<>> நாளை மறுநாள் பிரசாரம் செய்ய விஜய்க்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. நண்பகல் 12 மணி – மாலை 4 மணி வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரோடு ஷோ நடத்தக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. பிரசாரத்துக்கு முன்னதாக திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.


