News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 6, 2026
முன்பு கொரோனா.. இப்போது LPG: ராகுல் காந்தி

கொரோனாவை போலவே எரிவாயு பற்றாக்குறை நெருக்கடியையும் மோடி அரசு மோசமாக கையாள்வதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலையை சமாளிக்க முடியாததால், புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் சொந்த கிராமங்களுக்கு தப்பி ஓடுகிறார்கள் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், எந்த நெருக்கடி வந்தாலும் முதலில் ஏழைகள் பாதிக்கப்படும் நிலை இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 6, 2026
CSK தோல்விக்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்

கடந்த IPL சீசன் தனக்கு ஏமாற்றம், வலி மிகுந்ததாக இருந்ததாக அஸ்வின் பேசியுள்ளார். தன்னை விடுவிப்பதா, தக்க வைப்பதா என்ற தலைவலியை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே தானாக முன்வந்து ரிட்டயர் ஆனதாகவும் கூறியுள்ளார். இதனால், அணிக்கு ₹10 கோடி மிச்சமானதாக குறிப்பிட்ட அவர், நடப்பு சீசனில் CSK-வின் தோல்விக்கு, ஃபாஸ்ட் பவுலர்களை சரியாக பயன்படுத்தாததே காரணம் என தெரிவித்துள்ளார்.
News April 6, 2026
நடிகை த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிவரும் த்ரிஷா நடிப்பை கைவிட முடிவு செய்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் பேசியுள்ளார். த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதை தன்னிடம் சில தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


