News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 20, 2025

‘SORRY அம்மா.. நான் சாகப் போறேன்’

image

டெல்லியில் 10-ம் வகுப்பு மாணவன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தனது பள்ளி HM, ஆசிரியர்கள் மனரீதியாக டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதிவைத்துள்ளார். Sorry அம்மா பலமுறை உங்களை காயப்படுத்தி இருக்கிறேன், கடைசி முறையாக இப்போதும் அதை செய்துள்ளேன்; எனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News November 20, 2025

இந்த எண்களை தெரியாமல் இருக்காதீங்க!

image

அவசர நேரத்தில் இந்த ஹெல்ப்லைன் எண்களை தெரிந்து வைத்திருப்பது உங்களது உயிரையே காக்கலாம். தீயணைப்புத்துறை – 101, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு- 181, குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் – 1098, குழந்தைகள் காணாமல் போனால்- 1094, ராகிங் தொல்லைக்கு ஆளானால்- 1800-180-5522, இலவச மருத்துவத்துக்கு – 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இது அனைவருக்கும் உதவும், கண்டிப்பாக SHARE THIS.

News November 20, 2025

மசோதாவை கிடப்பில் போட கவர்னருக்கு அதிகாரமில்லை: SC

image

மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க 3 மாதங்கள் கெடு விதித்தது தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளுக்கான மனுவை SC-ன் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அதில், அரசியல் சாசனத்தின்படி மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு 3 மாதங்களே அவகாசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!