News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 24, 2026
பாடகி ஜானகியின் உடல்நலம் குறித்த வதந்திக்கு விளக்கம்

மகன் <<18931928>>முரளி கிருஷ்ணா<<>> இறந்த துக்கத்தில் பாடகி எஸ்.ஜானகி மறைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பொய்யான தகவல் என்று தெளிவுப்படுத்தியுள்ள ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா, `குடும்பத்தினர், நண்பர்களின் அரவணைப்பில் எஸ்.ஜானகி நலமுடன் இருக்கிறார். எங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே உள்ள தனிநபர்களால் வதந்தி பரப்பப்படுகிறது. தவறான தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
கோரைப்பாயின் சிறப்பே அதுதாங்க!

‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களது பண்பாட்டின் அடையாளமாக திகழும் கோரைப்பாயில் படுப்பதால் *அமைதியான உறக்கம் ஏற்படும் *மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும் *உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும் *கோரைப்பாயின் மற்றொரு சிறப்பு கோடைக் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிக்கும். SHARE IT
News January 24, 2026
12 நாளில் முடிவுக்கு வந்த காதல் திருமணம்

காதல் திருமணம் செய்த 12-வது நாளிலேயே இளம் டாக்டர் ஜீவிதா(25) சோக முடிவை எடுத்துள்ளார். கோவையை சேர்ந்த அவர், வீட்டை விட்டு வெளியேறி ஜன.11-ல் அபிஷேக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து, திருமணம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்த ஜீவிதா, வேலை கிடைக்காத விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இல்லறம் இனிக்கவில்லை. அதனால், மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.


