News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 18, 2026
மக்கள் செக்ஸ் கன்டென்ட் பார்க்கின்றனர்: பிரபல நடிகை

‘KD: The devil’ கன்னட படத்தின் ‘சர்கே சுனார்’ பாடலில் கொச்சையான வரிகள் உள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதற்கு அப்படத்தின் இயக்குநர் பிரேமின் மனைவியும், நடிகையுமான ரக்சிதா பதிலளித்துள்ளார். அதில், கடந்த காலங்களில் இதுபோன்ற வரிகளை கொண்ட பாடல்கள் வரவில்லையா?; தற்போது மக்கள் பாலியல் உள்ளடக்கம் கொண்ட படங்களை பார்க்கிறார்கள்; ஒரு பாடலால் எனது கணவரை அவமதிப்பது சரியல்ல எனவும் பதிவிட்டுள்ளார்.
News March 18, 2026
அரசு இயந்திரத்திற்கு வெட்கக்கேடு: நயினார்

<<19356260>>விளாத்திகுளத்தில் <<>> பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தை நயினார் சந்தித்து ஆறுதல் கூறினார். தனது X பதிவில், மாணவியின் குடும்பத்தாரின் கண்ணீர் முகம் தனது நெஞ்சில் ஆறாத வடுவாக உறுத்துகிறது. இவ்வழக்கில், இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காதது அரசு இயந்திரத்திற்கு வெட்கக்கேடு; ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் என கூறியுள்ளார்.
News March 18, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர் உற்பத்தி உயர்ந்தது

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பலரும் போட்டி போட்டுக் கொண்டு கேஸ் புக்கிங் செய்துவருகின்றனர். இந்நிலையில், வீட்டு கேஸ் சிலிண்டர் உற்பத்தி 38% அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 45 நாள்களுக்கு ஒருமுறை வீட்டு கேஸ் சிலிண்டர் புக் செய்யலாம். SHARE


