News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 25, 2026

கடும் விளைவை சந்திப்பீங்க.. எச்சரிக்கும் செல்வப்பெருந்தகை

image

மீனவர்​கள் கைதாவது தொடர் கதையாகிவிட்டதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தற்​போது 116 TN மீனவர்கள் இலங்கை சிறை​களில் அடைபட்​டுள்​ளதாக கூறிய அவர், இதுதொடர்பாக CM பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழு​தி​யும், மீனவர்கள் இது​வரை விடுவிக்​கப்​பட​வில்​லை என்றார். மேலும், அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்​க​வில்லை எனில் கடும் விளைவு​களை சந்​திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

News February 25, 2026

வங்கிக் கணக்கில் ₹2,000.. உடனே செக் பண்ணுங்க!

image

‘PM கிசான்’ திட்டத்தின் 22-வது தவணை வெளியிடப்படுவதற்கு முன்பு மத்திய அரசு பயனாளிகளின் விவரங்களை மறு சரிபார்ப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகளின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே <>pmkisan.gov.in <<>>தளத்திற்கு சென்று, Beneficiary Status-ஐ கிளிக் செய்து செல்போன் எண்ணை பதிவிட்டு Get Data-ஐ கிளிக் செய்தால் உங்கள் விவரம் திரையில் தோன்றும்.

News February 25, 2026

ராகுல் மனநலனில் அக்கறை காட்ட வேண்டும்: ஷெகாவாத்

image

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ராகுல் காந்தியின் செயல்பாடு நேர்மறை அரசியல் அல்ல என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் தெரிவித்துள்ளார். AI உச்சி மாநாடு தொடர்பான ராகுலின் குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றது எனவும், அவர் தனது மனநல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கூறினார். முன்னதாக AI மாநாட்டில் இளைஞர் காங்., சட்டையை களைந்து போராட்டம் நடத்தியது உலக அரங்கில் பேசுபொருளானது.

error: Content is protected !!