News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 17, 2026
SUPER: 300-க்கு 300 மார்க்!

<<19161780>>JEE மெயின்ஸ்<<>> தேர்வில் 300-க்கு 300 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார் ஆந்திராவின் ஜம்மலமடுகு கிராமத்தை சேர்ந்த பசலா மோஹித். கிராமத்தில் பிறந்து நாட்டையே தன்னை திரும்பி பார்க்க வைத்த மோஹித்துக்கு பாராட்டு மழை குவிகிறது. தினந்தோறும் 4 மணிநேரம் மட்டுமே நுழைவுத் தேர்வுக்காக படித்ததாகவும், IIT மும்பையில் கணினி அறிவியல் படிப்பதே தனது கனவு என்றும் மோஹித் கூறியுள்ளார். வாழ்த்துக்கள் மோஹித்!
News February 17, 2026
FLASH: செயற்கை நிதி நெருக்கடி: தங்கம் தென்னரசு

தமிழகத்திற்கு மத்திய அரசு செயற்கையான நிதி நெருக்கடியை கொடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டியுள்ளார். பேரிடர் நிவாரண நிதியாக ₹50,900 கோடி கேட்கப்பட்ட நிலையில், ₹1,151 கோடி மட்டுமே இதுவரை கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் GST பங்கு குறைப்பால் தமிழகத்திற்கு ₹9,600 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
News February 17, 2026
தமிழக அரசுக்கு டாக்டர்கள் எச்சரிக்கை!

சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) TN அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், பிப்.27 முதல் ஆபரேசன் தவிர்த்து வழக்கமான அனைத்து மருத்துவ பணிகளையும் புறக்கணிப்போம் என்றும், மார்ச் முதல் வாரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவோம் எனவும் அறிவித்துள்ளனர்.


