News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 15, 2026
இந்த தேர்தல் MGR – நம்பியார் சண்டை: செல்லூர் ராஜு

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் MGR, நம்பியாரை புரட்டி எடுப்பது போல் திமுகவை EPS புரட்டி எடுப்பதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் நம்பியாருக்கும் MGR-க்கும் இடையே நடக்கும் சண்டைபோல என்று தெரிவித்த அவர், அதிமுகவுக்கு பயந்துதான் திமுக மகளிருக்கு ₹5000 கொடுத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். திமுக தங்க கட்டியாக கொடுத்தால் கூட மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
OPS-க்கு TTV தினகரன் விடுத்த எச்சரிக்கை

தேர்தல் நெருங்கும் சூழலில் OPS இதுவரை கூட்டணி குறித்த தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. அம்மா ஆட்சி அமைய OPS உதவுவார் என தெரிவித்து வந்த TTV தினகரன் இப்போது பொறுமை இழந்து எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேச தொடங்கிவிட்டார். OPS உங்கள் கூட்டணியில் இணைவாரா என அவரிடம் கேட்ட போது, அம்மாவின் ஆட்சி அமைய விரும்புவோர் NDA-வில் இணையாவிட்டால் அவர்களது முகத்திரை கிழிந்துவிடும் என கூறியுள்ளார்.
News February 15, 2026
₹5000 மகளிர் உரிமைத் தொகை.. இந்த மெசேஜ் வந்துவிட்டதா!

தேர்தல் நெருங்குவதால் முன்கூட்டியே 3 மாத உரிமைத் தொகை ₹3,000 & கோடைக்கால சிறப்புத் தொகுப்பு ₹2,000 சேர்த்து ₹5,000 ஆக மகளிரின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆனது. இந்நிலையில் மகளிருக்கு CM ஸ்டாலினிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அன்பு சகோதரிக்கு வணக்கம்; உரிமைத் தொகை திட்டத்தில் வரவுவைக்கப்பட்ட ₹5,000-ஐ அத்தியாவசிய தேவை, சேமிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.


