News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 5, 2026
ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த மோடி

காங்கிரஸ் கட்சி சீக்கியர்களை அவமதிப்பதாக PM மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை ராகுல் காந்தி ‘<<19050653>>துரோகி நண்பா<<>>’ என அழைத்ததை சுட்டிக்காட்டி பேசிய மோடி, காங்கிரஸை விட்டு வெளியேறிய வேறு யாரையும் துரோகி என அழைக்காத இளவரசர் (ராகுல்), ரவ்னீத் சிங் சீக்கியர் என்பதால் அவமதித்ததாகவும், சீக்கியர் மீதான காங்கிரஸின் வெறுப்புக்கு இதுவே ஆதாரம் எனவும் கடுமையாக தாக்கினார்.
News February 5, 2026
படுகாயமடைந்த பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பயிற்சியின் போது படுகாயமடைந்துள்ளார். பந்து தாக்கி முகத்தில் காயம் ஏற்பட்டுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் கண் வீங்கியும், உதடு மற்றும் மூக்கில் பலத்த காயங்களும் உள்ளன. பயிற்சி போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News February 5, 2026
பிப்.7-ல் ஆசிரியர் கலந்தாய்வு.. பள்ளிகளுக்கு உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை EMIS தளத்தில் மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், பொருளியல் ஆகிய 6 பாடங்களுக்கான கலந்தாய்வு பிப்.7-ல் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ளும் பணிநாடுநர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE


