News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 2, 2026
பாகிஸ்தான் மோசமான அண்டை நாடு: ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தில் இருந்து மக்களை காக்க இந்தியாவிற்கு முழு உரிமை உண்டு என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சென்னை IIT-யில் பேசிய அவர், பாகிஸ்தானை ‘மோசமான அண்டை நாடு’ என விமர்சித்தார். ஒருபக்கம் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு கொண்டு, மறுபக்கம் தண்ணீர் கேட்க முடியாது என்று கூறிய அவர், இந்தியா தனது பாதுகாப்பிற்காக என்ன செய்ய வேண்டும் என யாரும் சொல்லத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
News January 2, 2026
காங்கிரஸில் இருந்து விலகல்.. தவெகவில் இணைய முடிவா?

தமிழ்நாடு காங்கிரஸின்(TNCC) சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சூர்யபிரகாசம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் அடிமை கூடாரமாக TN காங்கிரஸை மாற்ற செல்வப்பெருந்தகை முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அண்மை காலமாக விஜய்க்கு ஆதரவாக சூர்யபிரகாசம் பேசிவந்தார். TNCC அழிவின் பாதையில் பயணிப்பதாக <<18740431>>ஜோதிமணி கூறியிருந்த<<>> நிலையில், சூர்யபிரகாசத்தின் விலகல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 2, 2026
முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளித்த பங்குச்சந்தை

வார இறுதி நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்து, 85,762-க்கும், நிஃப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 26,328-க்கு வர்த்தகமாகியுள்ளது. மேலும் VI, HDFC Bank, Reliance, Coal India நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன. அதேநேரம் ITC, Shriram Finance, Nestle உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு இன்று சரிவை சந்தித்துள்ளன.


