News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 20, 2026
டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதித்து தள்ளிய டிரம்ப்புக்கு, அந்நாட்டு SC பேரிடியை கொடுத்துள்ளது. அவர் தனது அதிகார வரம்புகளை மீறி வரிகளை விதித்திருப்பதாகவும், இதில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் US-ன் தொழில்களும், 12 மாகாணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை அமெரிக்க SC பிறப்பித்துள்ளது.
News February 20, 2026
BREAKING: கட்சியில் இருந்து நீக்கம்: விஜய் அதிரடி WARNING

தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி தலைமை மட்டுமே வெளியிடும் என விஜய் உத்தரவின்பேரில் தவெக தலைமை அறிவித்துள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, யாராவது மோசடியில் ஈடுபட்டால், உடனே கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News February 20, 2026
லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

FC கட்டண உயர்வு மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். பழைய கட்டணமான ₹800 மட்டும் செலுத்தி தகுதிச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று TN அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து, பிப்.25 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


