News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 20, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகியது!

திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறியுள்ளது. கூடுதல் தொகுதிகள் கேட்டதற்கு இதுவரை திமுகவிடம் இருந்து பதில் வராததால் இம்முடிவை இக்கட்சி எடுத்துள்ளது. நாளை மறுநாள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிடவுள்ளாராம். இதற்காக அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடனும் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தவாகவின் இந்த முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?
News March 20, 2026
பாலியல் புகாரில் மதூர் சத்யா கைது

பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மதூர் சத்யா கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் புகாரை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் AIYF, ISCUF ஆகிய அதன் துணை அமைப்புகளில் இருந்து <<19403605>>சத்யா நீக்கப்பட்டார். <<>>இந்நிலையில் பெங்களூருவில் அவர் கைதானதை அடுத்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
News March 20, 2026
தன்னுடைய செல்வாக்கை உயர்த்துவாரா OPS?

தென்மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியை திமுகவுக்கு கொண்டு வரும் பொறுப்பு OPS-க்கு வழங்கப்பட்டுள்ளதாம். இதற்காகவே தென்மாவட்டங்களில் OPS அதிக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அப்போது, அந்தந்த பகுதி சமூக தலைவர்களுடனும் OPS தனியாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாராம். இதன் மூலம் தனது செல்வாக்கையும் தென்மாவட்டங்களில் உயர்த்த OPS திட்டமிட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.


