News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 23, 2026
விவேகானந்தர் கூறிய பொன்மொழிகள்

*உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால், வலிமை படைத்தவன் ஆவாய். *நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். *எதற்கும் பயப்படாதே. உன்னால் அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும். *உன்னையே நீ நம்பாதவரை, உன்னால் கடவுளை நம்ப முடியாது. *உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.
News February 23, 2026
மீண்டு(ம்) வருவோம்: சூர்யகுமார்

T20 WC சூப்பர் 8 சுற்றில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார், பவர்பிளேயில் முக்கியமான 3 விக்கெட்களை இழந்ததால் ஆட்டத்தை இழந்தோம் என்று கூறினார். குறிப்பாக பேட்டிங் சொதப்பல் என்றும் பும்ரா, அர்ஷ்தீப் தவிர மற்ற பவுலர்கள் தாரளமாக ரன்கள் கொடுத்ததாகவும் சுட்டிக்காட்டினர். மேலும், அடுத்த போட்டியில் மீண்டும் வருவோம் என்று தெரிவித்தார்.
News February 23, 2026
தேஜாஸ் போர் விமானம் விபத்து

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக IAF தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. தேசிய ஊடக அறிக்கையின்படி, வழக்கமான பயிற்சிக்கு பிறகு விமானம் தரையிறக்கத்தின்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானி பாதுகாப்பாக வெளியேறினார். இந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்த விபத்து தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த IAF முடிவு செய்துள்ளது. இது தேஜாஸ் விமானம் சம்பந்தப்பட்ட 3வது விபத்து.


