News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 17, 2025

உங்க மூளை இளமையாக இருக்கணுமா? இத செய்யுங்க

image

முதுமையை நாம் தடுக்க முடியாது. ஆனால், மூளையை சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க நம்மால் முடியும் என்கிறது புளோரிடா பல்கலையின் ஆய்வு. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் மூளை, அவர்களின் உண்மையான வயதைவிட 8 வயது இளமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நல்ல தூக்கம், புகைப்பழக்கத்தை தவிர்ப்பது & டென்ஷனை கட்டுப்படுத்துவது ஆகியவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதாம்.

News December 17, 2025

காந்தி கொலையில் RSS-க்கு தொடர்பு இல்லை: தமிழிசை

image

OPS – TTV இணைப்பை டெல்லி தலைமை பார்த்துக்கொள்ளும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் சிலர் திட்டமிட்டு அரசியல் செய்வதாகவும் சாடினார். மேலும், மகாத்மா காந்தி கொலையில் RSS-க்கு தொடர்பு இல்லை என்பதை கோர்ட்டே கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். MGNREGA திட்டம் VB-G RAM G என பெயர் மாற்றும் மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

News December 17, 2025

அரையாண்டு தேர்வு விடுமுறை குறைப்பா? CLARITY

image

தமிழகத்தில் டிச.24 – ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழையையொட்டி, பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், அதனை ஈடு செய்யும் விதமாக விடுமுறை நாள்களை குறைத்து ஜன.2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜன.5 அன்று தான் பள்ளிகள் திறக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!