News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 21, 2025
SPORTS 360°: ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்

*மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பதிவு செய்தது.
*ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. *இங்கிலாந்து – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இன்று பெர்த்தில் தொடங்குகிறது. *முத்தரப்பு டி20 தொடரில் இலங்கை அணியை 67 வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது.
News November 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 21, கார்த்திகை 5 ▶கிழமை:வெள்ளி ▶நல்ல நேரம்: 9.00 AM – 10.30 AM ▶ராகு காலம்: 10.30 AM – 12.00 PM ▶எமகண்டம்: 3.00 PM – 4.30 AM ▶குளிகை: 7.30 AM – 9.00 AM ▶திதி: அதிதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: அசுவினி ▶சிறப்பு : சந்திர தரிசனம். சுக்கிரன் வழிபாட்டு நாள் ▶வழிபாடு : மகாலட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்து வழிபடுதல்.
News November 21, 2025
இந்தியர்களின் சிந்தனை புனிதமானது: RN ரவி

சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷரின் தலையீட்டால், நம் நாட்டின் கலை மற்றும் கலாசாரம் சார்ந்த கூறுகள் மறைக்கப்பட்டதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மேற்கத்திய கலாசாரத்தை தவிர்த்து, நம்முடைய பாரம்பரிய கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் என்றும், ஐரோப்பியர்களை விட இந்தியர்களின் சிந்தனை புனிதம் வாய்ந்தது எனவும் கூறியுள்ளார். நமது கலாசாரம், பண்பாடு 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அவர் தெரிவித்தார்.


