News November 24, 2024
IPL-ல் இப்படிதான் சம்பளம் வழங்கப்படுகிறது

IPL ஏலத்தில் எந்த தொகைக்கு வீரர் வாங்கப்படுகிறாரோ, அதுவே அவர்களின் அந்த சீசனின் சம்பளமாகும். வரிகள் போக அந்த தொகை நேரடியாக வீரருக்கு வழங்கப்படும். Retain செய்யப்படும் வீரர்களுக்கு, முந்தைய ஏலத்தில் உறுதி செய்யப்பட்ட தொகைதான் சம்பளம். சீசன் தொடங்குவதற்கு முன்பே வீரர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், சம்பளம் கிடையாது. போட்டியின் போது காயம் ஏற்பட்டால், வீரரின் மருத்துவ செலவுகளை அணி நிர்வாகம் வழங்கும்.
Similar News
News January 2, 2026
ஈரானில் அமெரிக்க படைகள் இறங்கும்: டிரம்ப்

ஈரானில் அமைதி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அந்நாட்டு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தினால் அமெரிக்கா தனது படைகளை களமிறக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். தங்களது படைகள் முழு ஆயத்தங்களுடன் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என <<18738812>>ஈரான்<<>> அரசு தலைவரின் ஆலோசகர் அலி லாரிஜனி பதிலடி கொடுத்துள்ளார்.
News January 2, 2026
அதிமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்தார்

செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் இணையவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அந்த வகையில், அதிமுக திருச்செங்கோடு Ex சேர்மன் பாலசுப்பிரமணியன், அருண்ராஜ் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். MGR காலத்திலேயே ஒன்றிய சேர்மனாக இருந்த அவர், திருச்செங்கோடு அதிமுகவின் முகமாக விளங்கினார். 2026 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
News January 2, 2026
யார் இந்த ஜே.சி.டி பிரபாகர்?

தவெகவில் இணைந்த <<18744071>>ஜேசிடி பிரபாகர் <<>>எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். 1980, 2011 ஆண்டுகளில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று MLA-வாக பணியாற்றி இருந்தார். அதிமுக பிளவின்போது OPS அணியில் முக்கியப் பங்கு வகித்தவர். அதிமுகவை ஒன்றிணைக்கும் நோக்கில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியதில் முக்கியமானவர் இவர். கட்சி ஒருங்கிணைப்பு முயற்சி பலனளிக்காததால் தவெகவில் இணைந்துள்ளார்.


