News November 24, 2024
IPL-ல் இப்படிதான் சம்பளம் வழங்கப்படுகிறது

IPL ஏலத்தில் எந்த தொகைக்கு வீரர் வாங்கப்படுகிறாரோ, அதுவே அவர்களின் அந்த சீசனின் சம்பளமாகும். வரிகள் போக அந்த தொகை நேரடியாக வீரருக்கு வழங்கப்படும். Retain செய்யப்படும் வீரர்களுக்கு, முந்தைய ஏலத்தில் உறுதி செய்யப்பட்ட தொகைதான் சம்பளம். சீசன் தொடங்குவதற்கு முன்பே வீரர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், சம்பளம் கிடையாது. போட்டியின் போது காயம் ஏற்பட்டால், வீரரின் மருத்துவ செலவுகளை அணி நிர்வாகம் வழங்கும்.
Similar News
News December 18, 2025
காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார் விஜய்

ஈரோடு மக்கள் சந்திப்பை பிரமாண்டமாகவும், பாதுகாப்புடனும் ஏற்பாடு செய்த செங்கோட்டையனுக்கும், போலீஸுக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். மக்களை சந்திக்க புறப்பட்டதில் இருந்தே பல தடைகள் தொடர்ந்து வருகின்றன. அதையெல்லாம் மக்களின் பேராதரவுடன் முறியடித்து வருகிறோம். அந்த வகையில், ஈரோட்டில் நடந்த சந்திப்பு, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
‘தமிழகத்தில் பொங்கல் பரிசாக ₹5,000’

தமிழகத்தில் ₹5,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்க அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது, இந்த குரல் மக்களிடமும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹5,000 வழங்க வலியுறுத்தி CITU சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால், பொங்கல் தொகுப்பு அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT.
News December 18, 2025
விஜய்யை பேச விடுங்கள்: உதயநிதி

திமுக நடத்துவது கண்காட்சி என <<18602735>>விஜய்<<>> கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து DCM உதயநிதியிடம் கேட்டதற்கு, விஜய்யிடம் இதேபோல் என்றைக்காவது கேள்வி கேட்டுள்ளீர்களா? அவரை ஒருமுறை பேச விடுங்கள், அப்போது தெரியும் என கூறிவிட்டு சென்றார். மாநாடு, பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் விஜய், இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


