News November 24, 2024
IPL-ல் இப்படிதான் சம்பளம் வழங்கப்படுகிறது

IPL ஏலத்தில் எந்த தொகைக்கு வீரர் வாங்கப்படுகிறாரோ, அதுவே அவர்களின் அந்த சீசனின் சம்பளமாகும். வரிகள் போக அந்த தொகை நேரடியாக வீரருக்கு வழங்கப்படும். Retain செய்யப்படும் வீரர்களுக்கு, முந்தைய ஏலத்தில் உறுதி செய்யப்பட்ட தொகைதான் சம்பளம். சீசன் தொடங்குவதற்கு முன்பே வீரர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், சம்பளம் கிடையாது. போட்டியின் போது காயம் ஏற்பட்டால், வீரரின் மருத்துவ செலவுகளை அணி நிர்வாகம் வழங்கும்.
Similar News
News January 7, 2026
செங்கல்பட்டு: ரூ.50 போதும்… ரூ.35 லட்சம் பெறலாம்!

கிராம சுரக்ஷா யோஜனா’ என்ற திட்டத்தில் தினசரி ரூ.50 டெபாசிட் செய்வதன் மூலம் பின் ரூ.35,00,000 வரை பெறலாம். 19 வயது முதல் 55வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். செங்கல்பட்டு:மக்களே உடனே உங்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறவும். மேலும், விவரங்களுக்கு உங்க மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தை அனுகவும். ஷேர் பண்ணுங்க
News January 7, 2026
ஈரான் தான் அடுத்த குறி.. டிரம்ப் மெகா பிளான்!

வெனிசுலாவை அடுத்து ஈரானை தான் டிரம்ப் குறிவைத்துள்ளதாக US பொருளாதார பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்துள்ளார். புத்தாண்டில் டிரம்ப்- இஸ்ரேல் PM நெதன்யாகு சந்தித்த போதே இதற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது. ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், US வெளியுறவுக் கொள்கையை அதிபர்கள் அல்ல, ‘Deep State’ எனும் நிழல் அரசு தான் தீர்மானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
காங்., உடன் இணைந்த பாஜக: ஃபட்னவிஸ் எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் <<18788690>>அம்பர்நாத்<<>> நகராட்சி தேர்தலில் உள்ளூர் பாஜக தலைவர்கள் காங்., உடன் கைகோர்த்துள்ளதை கண்டித்த CM தேவேந்திர ஃபட்னவிஸ், இதை ஏற்க முடியாது என்று சாடியுள்ளார். இது கட்சியின் ஒழுக்கத்திற்கு எதிரானது என்று கூறிய அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். அகோட் நகராட்சி தேர்தலில், AIMIM உடன் பாஜக இணைந்ததற்கும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


