News January 25, 2025
பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.
Similar News
News December 18, 2025
பொங்கல் பரிசுத்தொகை ₹4,000.. தமிழக அரசு முடிவு

2026 தேர்தலை கருத்தில்கொண்டு, பொங்கல் பரிசு ரொக்கத்தொகையை இதுவரை இல்லாத அளவில் வழங்க திமுக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பொங்கல் பரிசுத்தொகையாக ₹3,000 வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை & ஒரு முழுக்கரும்பும் கொடுக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும், ₹1,000 மகளிர் உரிமைத்தொகையும் வரவு வைக்கப்படும் என்பதால், மொத்தமாக ₹4,000 கிடைக்கலாம்.
News December 18, 2025
90s கிட்ஸ்களே இதை மீண்டும் படிக்கலாமா?

அண்ணே அடுத்த வருஷம் இது எனக்கு வேணும், அக்கா அவளுக்கு அத கொடுத்துராதீங்க என ஒரு வருடத்திற்கு முன்பே புக் செய்வோம். அது ரயில், பஸ்ஸுக்கான டிக்கெட் அல்ல. ‘கோனார் தமிழ் உரை’ நோட்ஸ். சற்று கிழிசலாக இருந்தாலும் நூல் வைத்து தைத்து, நியூஸ் பேப்பரை அட்டையாக மாற்றி அலங்கரித்து வைத்திருப்போம். அதிலும் புதிதாக வாங்கினால், அதில் வரும் வாசமே இனம்புரியாத மகிழ்ச்சியை தரும். நீங்க ஃபீல் பண்ணிருக்கீங்களா?
News December 18, 2025
தவெக ஒரு கொலைகார சக்தி: TKS இளங்கோவன்

திமுக ஒரு தீய சக்தி என <<18602926>>விஜய்<<>> கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், கரூரில் 41 பேரை கொன்ற தவெக ஒரு கொலைகார சக்தி என்று TKS இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் தாமதமாக வந்ததற்கான காரணத்தை இதுவரை விஜய் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சாடினார். அதேநேரம், மக்களுக்காகவே பணியாற்றுகிற ஒரு தூய சக்தியாக திமுக விளங்குவதாகவும் TKS கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?


