News January 25, 2025
பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.
Similar News
News January 15, 2026
ஜனவரி 15: வரலாற்றில் இன்று

*இந்திய ராணுவ தினம். *1868 – நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான டி.எம்.நாயர் பிறந்தார். *1929 – அமெரிக்க புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங் பிறந்தார். *1966 – நடிகை பானுப்ரியா பிறந்தார். *1981 – தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் காலமானார். *1986 – நடிகர் விக்ரம் பிரபு பிறந்தார். *2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. *2018 – எழுத்தாளர் ஞாநி சங்கரன் மறைந்தார்.
News January 15, 2026
தமிழகத்தில் 5 IAS அதிகாரிகள் இடமாற்றம்

பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 5 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக இன்னசென்ட் திவ்யா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக கிறிஸ்துராஜ், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக விசாகன், சுகாதாரத்துறை கூடுதல் செயலாளராக உமா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக ரத்னா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News January 15, 2026
பொங்கல் பண்டிகையும் சூரியனும்

சூரியனை வழிபடுவது ஐம்பூதங்களையும் வழிபடுவதற்கு சமம் என்று நன் முன்னோர்கள் கருதினர். சூரிய வழிபாட்டினால் தோல்நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்றும் நம்பினர். இதன் காரணமாக சூரியன் வடக்கு திசையை நோக்கி பயணிக்க தொடங்கும் தை முதல் நாளில் பொங்கல் வைத்து படையல் செய்து வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக சங்க காலம் தொடங்கி நாமும் பொங்கலை கொண்டாடி வருகிறோம்.


