News January 25, 2025
பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.
Similar News
News December 7, 2025
தி.மலை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – APPLY NOW!

தி.மலை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 7, 2025
விண்வெளியில் கூட வாழும் உயிரி தெரியுமா?

இயற்கை அதிசயங்களில் ஒன்றான மிகச்சிறிய உயிரியான டார்டிகிரேட் (நீர் கரடி), 8 காலுடன், 1 மி.மீ.-க்கும் குறைவானவை. கடும் குளிரில், வெப்பத்தில், அணுக்கதிர்வீச்சில், ஏன் விண்வெளியில் கூட உயிர் இவை உயிர்வாழும். நீர் இல்லாதபோது, உடல் செயல்பாட்டை நிறுத்தி, பல ஆண்டுகள் காத்திருந்து, நீர் கிடைக்கும்போது புத்துயிர் பெறும். 2007-ல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இவை, 10 நாள்களுக்கு பின் பூமிக்கு வந்து உயிர்பெற்றது.
News December 7, 2025
2026 தேர்தலில் தொகுதி மாற அமைச்சர் சேகர் பாபு திட்டம்!

2026 தேர்தலில் அமைச்சர் சேகர் பாபு RK நகர் தொகுதிக்கு மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் களம் கண்ட சேகர் பாபு, பாஜகவின் வினோஜ் செல்வத்தை 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தற்போது கள நிலவரம் அவருக்கு சாதகமாக இல்லை என கூறப்படுவதால், RK நகருக்கு மூவ் ஆக உள்ளாராம். இதனால், துறைமுகம் தொகுதிக்கு சிற்றரசு உள்ளிட்டோர் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.


