News January 25, 2025
பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.
Similar News
News September 16, 2025
10th பாஸ்.. தமிழக அரசில் ₹62,000 சம்பளத்தில் வேலை!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையில் 375 பணியிடங்கள் காலியாகவுள்ளன. 18- 34 வயதுக்குட்பட்ட 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்ச சம்பளமாக ₹62,000 வழங்கப்படும். வரும் 30-ம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
News September 16, 2025
இந்தி திணிப்புக்கு எதிராக பொங்கிய விஜய்!

இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என அமித்ஷா கூறியது, வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் வலுக்கட்டாயமாக ஒரு மொழியை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் விஜய் கூறியுள்ளார். எனவே, இந்தி திவாஸ் அன்று தெரிவித்த கருத்தை அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.
News September 16, 2025
ஆயுத பூஜை விடுமுறை.. செப்.23 முதல் சிறப்பு அறிவிப்பு

<<17708234>>தசரா<<>>, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, செப்.23 – அக்.23 வரை சென்னை எழும்பூர் – தூத்துக்குடி இடையே இரு மார்க்கத்திலும் வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல், செப். 28 – அக் – 26 வரை தாம்பரம் – நாகர்கோவில் இடையேயும், செப்.25 – அக்.23 வரை சென்னை – கோவை போத்தனூர் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.