News April 6, 2025
இது அப்துல்கலாமின் நிலம்… மோடி உற்சாகம்

பாம்பன் பாலத்தை திறந்து வைத்து பேசிய PM மோடி, இது மறைந்த EX குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல்கலாமின் நிலம் என மகிழ்ச்சி தெரிவித்தார். அப்துல்கலாமின் வாழ்க்கை, அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன என்பதை நமக்குக் காட்டியதாகவும் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம், 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதம் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் மோடி கூறினார்.
Similar News
News April 7, 2025
23 பேரால் கேங்க் ரேப்… ஒரு வாரமாக சிறுமிக்கு கொடுமை!

உ.பி.யில் 23 மனித மிருகங்களால் ஒரு சிறுமி வேட்டையாடப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 12-ம் வகுப்பு பயிலும் மாணவி, தனது நண்பருடன் பாருக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து, சிறுமியை ஒரு வாரமாக ரேப் செய்துள்ளனர். 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
News April 7, 2025
₹50 கோடி: ‘பராசக்தி’ ஒரே டீல்

‘பராசக்தி’ படத்தின் OTT உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்க படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். உரிமத்தை ₹50 கோடிக்கு விற்க படக்குழு பேரம் பேசியதாகவும், ஆனால், ₹45 கோடிக்கு வாங்க நெட்ஃபிளிக்ஸ் முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சொன்ன ரேட்டில் இருந்து படக்குழு பின்வாங்காத நிலையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறதாம். 2026 பொங்கலுக்கு படம் ரிலீசாக உள்ளது.
News April 7, 2025
மத நம்பிக்கையால் வீட்டிலேயே பிரசவம்?… பெண் பரிதாப பலி

கேரளாவில் வீட்டிலேயே பிரசவித்த பெண், சற்றுநேரத்தில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதம் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் சிராஜுதின், தனது கர்ப்பிணி மனைவி அஸ்மாவை ஹாஸ்பிடலில் சேர்க்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவர், சிறிதுநேரத்தில் உயிரிழந்தார். மகளின் இறப்புக்கு சிராஜுதினே காரணம் என அவரது பெற்றோர் புகாரளித்துள்ளனர். போலீஸ் விசாரித்து வருகிறது.