News April 23, 2025
இவனே வீரன்.. அதனால்தான் வீரமரணம் கிடைத்ததோ!

பஹல்காம் தாக்குதலின் போது, அப்பகுதியில் குதிரை சவாரி தொழில் செய்யும் சையது அடில் ஹூசைன் ஷா என்பவர் செய்த செயல் கண்கலங்க வைத்துள்ளது. அப்பாவி மக்கள் சுடப்படுவதை கண்டதும் உடனே அவர், தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். இருப்பினும் சுதாரித்துக் கொண்ட தீவிரவாதி, அவரை சுட்டு கொன்றுள்ளான். தனது உயிரை துச்சமாக நினைத்து, மக்களை காப்பாற்ற முயன்றுள்ளார் அந்த வீரன்.
Similar News
News April 23, 2025
நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க நாளை மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
News April 23, 2025
பிரபல இளம் நடிகை காலமானார்

ஹாலிவுட்டின் பிரபல இளம் நடிகை சோஃபி நிவெய்டி (24), அகால மரணமடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மம்மோத் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலக அளவில் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர் சோஃபி. அதன்பின் பல படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், தீவிர மனநிலைக் கோளாறால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். RIP சோஃபியா!
News April 23, 2025
வெயில்: பகல் 12 to 3 வெளியே வர வேண்டாம்

நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.