News October 12, 2025

சளி, இருமலை போக்க இந்த மூலிகை தேநீர்தான் பெஸ்ட்!

image

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு கொதிக்க வையுங்கள். பின் கற்பூரவள்ளி இலைகளை சேருங்கள். அதில் தோல் நீக்கிய இஞ்சி (சிறு)துண்டுகள், மிளகு மற்றும் ஏலக்காயை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதை வடிகட்டிக்கொள்ளவும். மிதமான சூட்டில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இது சளி, இருமலுக்கு சிறந்த நிவாரணமாகும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.

Similar News

News October 12, 2025

கரூர் சம்பவத்துக்கு இவர்தான் காரணம்: நயினார்

image

கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும் என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ₹10 லட்சம் நிவாரணம், ஆனால் சாதாரண விபத்தில் இறந்தால் ₹2 லட்சம் மட்டும்தான். இது என்ன ஆட்சி எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், NDA ஆட்சி அமையும்போது இவை அனைத்துக்கும் திமுக பதில் சொல்ல வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.

News October 12, 2025

GAS டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

image

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிக்கிறது. இதனால், ஒரு சில இடங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மேலும் ஸ்டிரைக் நீடித்தால், சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பேச்சுவார்த்தைக்கு எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இன்று மாலை அல்லது நாளை சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.

News October 12, 2025

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

தஞ்சை, பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த 31-வது வார்டு கவுன்சிலர் குமணன், 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28-வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் கூண்டோடு திமுகவில் இணைந்துள்ளனர். இதனிடையே, இவர்கள் நான்கு பேரையும் அதிமுகவில் இருந்து நீக்கி, EPS சற்றுமுன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!