News April 14, 2025

இந்த பாட்டில் தண்ணீர் விலை ஜஸ்ட் ₹50 லட்சம்தான்!

image

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீர் ‘Acqua di Cristallo Tributo a Modigliani’ ஆகும். 750 மி.லி கொண்ட இந்த பாட்டிலின் விலை ₹50 லட்சம். 24 காரட் தங்கத்தால் செய்யப்படும் இந்த பாட்டில் தண்ணீரில் 5 கிராம் தங்கம் சேர்க்கப்படுகிறது. பிரான்ஸ், பிஜி, ஐஸ்லாந்தில் இருந்து சேகரிக்கப்படும் நீர் இதில் நிரப்பப்படுகிறது. இதன் பெயர் 2019-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

Similar News

News January 21, 2026

இன்று கவனம் பெற்ற இரு இணைப்புகள்.. யாருக்கு பலன்?

image

இன்று நிகழ்ந்துள்ள இரு இணைப்புகள் (திமுகவில் வைத்திலிங்கம், NDA-வில் TTV) அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. வைத்திலிங்கம் இணைந்திருப்பது ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் திமுகவுக்கு பலன் கொடுக்கும். அதேநேரம் TTV இணைந்திருப்பது தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல், டெல்டாவிலும் அதிமுகவுக்கு கூடுதல் பலமாக அமையும். 2021-ல் அமமுக பிரித்த வாக்குகளே, அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

News January 21, 2026

கணவன் நாக்கை கடித்து துப்பிய மனைவி

image

கணவன் மனைவிக்குள் சின்னச் சின்னச் சண்டைகள் வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த சண்டை அடுத்த நில மணி நேரங்களில் சரியாகிவிடும். ஆனால், உ.பி.யில், திருமணமாகி ஓராண்டு முடிவதற்குள் கணவனின் நாக்கை கடித்து துப்பியிருக்கிறார் மனைவி. காசியாபாத்தை சேர்ந்த விபின் தினமும் முட்டை குழம்பா என கேட்டதற்கு, ஆத்திரமடைந்த மனைவி இஷா, தனது பற்களால் கணவனின் நாக்கை துண்டித்துள்ளார்.தற்போது, இஷாவை போலீசார் கைது செய்தனர்.

News January 21, 2026

செங்கோட்டையன் தவெகவில் இருந்து விலகலா? EXPLANATION

image

தவெகவில் இருந்து <<18906535>>செங்கோட்டையன் விலக<<>> இருப்பதாக பரவிய செய்திக்கு புஸ்ஸி ஆனந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பனையூரில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எனக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக செய்தி போடுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், எங்களை பொறுத்தவரை விஜய்யின் கீழ் அனைவருமே தொண்டர்கள்தான் என கூறினார்.

error: Content is protected !!