News April 14, 2025

இந்த பாட்டில் தண்ணீர் விலை ஜஸ்ட் ₹50 லட்சம்தான்!

image

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீர் ‘Acqua di Cristallo Tributo a Modigliani’ ஆகும். 750 மி.லி கொண்ட இந்த பாட்டிலின் விலை ₹50 லட்சம். 24 காரட் தங்கத்தால் செய்யப்படும் இந்த பாட்டில் தண்ணீரில் 5 கிராம் தங்கம் சேர்க்கப்படுகிறது. பிரான்ஸ், பிஜி, ஐஸ்லாந்தில் இருந்து சேகரிக்கப்படும் நீர் இதில் நிரப்பப்படுகிறது. இதன் பெயர் 2019-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

Similar News

News November 10, 2025

வழுக்கை தலை.. எந்த நாட்டில் அதிகம் தெரியுமா?

image

ஆண்களுக்கு வழுக்கை தலை பெரும் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. சிலர் மட்டுமே இதனை வருத்தமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். பலரும் இதற்காக பெரும் கவலை அடைகின்றனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வழுக்கைத் தலையுடன் உள்ள ஆண்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளனர் என்று தெரியுமா? மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இந்தியா இருக்கா, இல்லையா?

News November 10, 2025

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

22 கேரட் தங்கம் இன்று ஒரே நாளில் தாறுமாறாக ₹1,440 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹560 உயர்ந்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,480-க்கும், 1 சவரன் ₹91,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News November 10, 2025

பெரும் சதி முறியடிப்பு: 360Kg வெடிபொருள்கள் பறிமுதல்

image

சில நாள் முன்பு, JeM உடன் தொடர்புடைய டாக்டரான அடில் ராதர் உ.பி.,-யில் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, ஹரியானாவில் மற்றொரு டாக்டரான முஸம்மில் ஷகில் என்பவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, 360Kg வெடிபொருள், AK47 துப்பாக்கி, 84 தோட்டாக்கள், 20 டைமர்களை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!