News April 14, 2025

இந்த பாட்டில் தண்ணீர் விலை ஜஸ்ட் ₹50 லட்சம்தான்!

image

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீர் ‘Acqua di Cristallo Tributo a Modigliani’ ஆகும். 750 மி.லி கொண்ட இந்த பாட்டிலின் விலை ₹50 லட்சம். 24 காரட் தங்கத்தால் செய்யப்படும் இந்த பாட்டில் தண்ணீரில் 5 கிராம் தங்கம் சேர்க்கப்படுகிறது. பிரான்ஸ், பிஜி, ஐஸ்லாந்தில் இருந்து சேகரிக்கப்படும் நீர் இதில் நிரப்பப்படுகிறது. இதன் பெயர் 2019-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

Similar News

News November 28, 2025

இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவித்தார்

image

கனமழை எச்சரிக்கையை அடுத்து, ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.28) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ‘டிட்வா’ புயல் காரணமாக, கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பாம்பன் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும், இன்று சில மாவட்டங்களுக்கு <<18406009>>ரெட் அலர்ட் எச்சரிக்கை<<>> விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கவனமாக இருங்கள்.

News November 28, 2025

77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் PM மோடி

image

கோவாவில் உள்ள சமஸ்தான கோகர்ண பர்தகலி ஜீவோத்தம் மடத்தில், இந்தியாவின் மிக உயரமான ராமர் சிலையை இன்று PM மோடி திறந்து வைக்கிறார். 77 அடி உயரம் கொண்ட இந்த வெண்கல சிலையை திறந்து வைக்கும் மோடி, சிறப்பு அஞ்சல் தலை & நாணயத்தையும் வெளியிடவுள்ளார். இந்த சிலையை, குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் உருவாக்கியுள்ளார்.

News November 28, 2025

கோலமாவு கோகிலா கதையா ரிவால்வர் ரீட்டா?

image

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படம், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ போன்று உள்ளதாக தகவல்கள் பரவின. இது தனக்கும் முதலில் தோன்றியதாக கீர்த்தி கூறியுள்ளார். இதனால், இப்பட ஷூட்டுக்கு முன்பு மீண்டும் கோலமாவு கோகிலா படத்தை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படம் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் என்று விளக்கமளித்தார். இப்படம் இன்று ரிலீஸாகிறது.

error: Content is protected !!