News April 14, 2025

இந்த பாட்டில் தண்ணீர் விலை ஜஸ்ட் ₹50 லட்சம்தான்!

image

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீர் ‘Acqua di Cristallo Tributo a Modigliani’ ஆகும். 750 மி.லி கொண்ட இந்த பாட்டிலின் விலை ₹50 லட்சம். 24 காரட் தங்கத்தால் செய்யப்படும் இந்த பாட்டில் தண்ணீரில் 5 கிராம் தங்கம் சேர்க்கப்படுகிறது. பிரான்ஸ், பிஜி, ஐஸ்லாந்தில் இருந்து சேகரிக்கப்படும் நீர் இதில் நிரப்பப்படுகிறது. இதன் பெயர் 2019-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

Similar News

News September 17, 2025

சூரிய கிரகணம்.. 5 ராசியினருக்கு எச்சரிக்கை

image

செப்.21 இரவில் நிகழும் சூரிய கிரகணத்தால் 5 ராசியினர் எச்சரிக்கையாக இருக்குமாறு ஜோதிடர்கள் கணித்துள்ளனர். *ரிஷபம்: சிற்சில கஷ்டங்களையும் நிறைய செலவுகளையும் எதிர்கொள்ளக் கூடும். *மிதுனம்: நம்பிக்கைக்குரியவர் ஏமாற்றலாம். பணப் பிரச்னை ஏற்படலாம். *கன்னி: தொழில், காதல், நிதிநிலை போன்றவற்றில் சிரமம் ஏற்பட வாய்ப்பு. *சிம்மம்: சொத்து தொடர்பாக பிரச்னை வரலாம். *மீனம்: முதலீடுகளால் இழப்பு ஏற்படலாம்.

News September 17, 2025

உலக கிரிக்கெட்டின் Don-ஆன இந்தியா!

image

ODI, T20 கிரிக்கெட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. அதே போல, T20 பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி, ஆல் ரவுண்டரில் ஹர்திக் ஆகியோர் முறையே முதல் இடத்தில் உள்ளனர். மேலும், டெஸ்ட் பவுலர்களில் பும்ராவும், ஆல் ரவுண்டர்களில் ஜடேஜாவும் முதல் இடத்தில் உள்ளனர். ODI பேட்டிங்கில் கில் நம்பர் 1 வீரராக உள்ளார். கொடி பறக்குதா!

News September 17, 2025

காதலன் இறந்த சோகத்தில் காதலி தற்கொலை

image

துணை இறந்தால் உயிரை மாய்க்கும் அன்றில் பறவையை போல் தமிழகத்தில் ஒரு காதல் ஜோடி சோக முடிவை எடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே இளைஞர் பூபதி(21), 12-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஜோடிகள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதில், மனமுடைந்த பூபதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் இறந்த துக்கம் தாளாமல் அந்த மாணவியும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது சரியா?

error: Content is protected !!