News March 18, 2024
இந்த தடையால் கறுப்பு பணப்புழக்கம் அதிகரிக்கும்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது ஒருவகையில் பொருளாதாரத்தை உயர்த்த உதவுமென மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ’தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதித்தாலும், அரசியல் கட்சிகளுக்கு பணம் வரும். ஆனால் கறுப்பு பணமாக இருக்கும்’ என்றார்.
Similar News
News October 29, 2025
ChatGPT-யில் அதிகரிக்கும் தற்கொலை உரையாடல்கள்

மனிதர்களுடன் நாம் செலவழிக்கும் நேரம் குறைத்து செல்போன், கணினி உள்ளிட்டவற்றுடன் கடத்தும் நேரம் அதிகரித்துள்ளது. மனித உரையாடல்கள் குறையும் போது வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழக்கும் இளம் தலைமுறைக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. இதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு வாரமும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை தொடர்பான உரையாடல்களை, ChatGPT-யிடம் நடத்துவதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
News October 29, 2025
மறைந்தும்.. மறையாத ‘கவிஞர் வாலி’

கருத்தாழமிக்க எளிய தமிழ் சொற்களை பாடல்களில் அமைத்து, அழியா புகழ் பெற்ற கவிஞர் வாலிக்கு இன்று பிறந்தநாள். சினிமா பாடல்களில் அவரின் முத்திரை இல்லாத இடமே இல்லை எனலாம். ‘மின்வெட்டு நாளில் இங்கு, மின்சாரம் போல வந்தாயே’ என்ற வரிகளை எழுதிய போது வாலிக்கு வயது 81. அவருக்குள் காதலும், எழுத்தும் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்கு இந்த வரிகள் சிறந்த எடுத்துகாட்டு. வாலியின் வரிகளில் உங்களை கவர்ந்தது எது?
News October 29, 2025
உலகின் மிகவும் விலையுயர்ந்த Handbag கலெக்ஷன்!

ஆடம்பரம் என்பது வெறும் டிசைனர் ஆடைகளை அணிவதோ ஆடம்பரமான காரை வைத்திருப்பதோ மட்டுமல்ல. Handbag-களும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. அப்படி, உலகின் மிகவும் விலையுயர்ந்த டாப் 6 Handbag-களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய, போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இவற்றின் விலைக்கு சென்னையில் ஒரு வீடே வாங்கிவிடலாம், ஆனால் பணக்காரர்கள் கையில் தொங்கவிட்டபடி செல்வார்கள்.


