News March 18, 2024
இந்த தடையால் கறுப்பு பணப்புழக்கம் அதிகரிக்கும்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது ஒருவகையில் பொருளாதாரத்தை உயர்த்த உதவுமென மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ’தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதித்தாலும், அரசியல் கட்சிகளுக்கு பணம் வரும். ஆனால் கறுப்பு பணமாக இருக்கும்’ என்றார்.
Similar News
News September 8, 2025
கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா

Enteromix எனும் கேன்சர் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது கேன்சர் கட்டிகளை முழுவதுமாக அழிக்கும் திறன் கொண்டது எனவும் நுரையீரல், பெருங்குடல், மார்பக புற்றுநோய்களை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பரிசோதனைகளில் 100% வெற்றிகரமான முடிவுகளை கொடுத்துள்ளதாகவும், நேரடி பயன்பாட்டிற்காக அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதல் பெற காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
News September 7, 2025
மக்களுக்காக போராடி உதயநிதி சிறை சென்றாரா? EPS கேள்வி

பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை எனவும், திமுக கம்பெனியின் அடுத்த அதிபராக வர உதயநிதி துடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், மக்களுக்காக போராடி உதயநிதி ஜெயிலுக்கு போயிருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 7, 2025
ரஜினியுடன் புதிய படத்தில் நடிக்கிறேன்: கமல் அறிவிப்பு

ரஜினியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் துபாயில் நடந்த SIIMA விருது விழாவில் பேசிய கமல், நல்ல நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து நடிக்க போகிறோம் எனவும், படத்தை பார்த்துவிட்டு அது தரமான சம்பவமா என்று சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். 2 லெஜெண்டுகள் இணையும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.