News April 8, 2024
பேச்சுவார்த்தைக்கு பிடிகொடுக்காத திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம் மீது அக்கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கடும் அதிருப்தியில் உள்ளது அனைவருக்கும் அறிந்ததே. மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது, பொறுப்பு வழங்காமல் ஒதுக்கியது போன்றவையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் பரப்புரையில் அவரை ஈடுபடுத்த எண்ணி முக்கியஸ்தர் ஒருவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதற்கும் அவர் பிடிகொடுக்கவில்லையாம்.
Similar News
News November 12, 2025
தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவின் சதி: பாக்., PM

<<18258662>>பாகிஸ்தானில் கார் வெடித்து<<>> 12 பேர் உயிரிழந்த நிலையில், இது தற்கொலைப்படை தாக்குதல் என அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவின் சதி இருப்பதாகவும், ஆப்கனை தளமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் அடிமையான TTP தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.
News November 12, 2025
₹4 கோடிக்கு கார் வாங்கிய அர்ஷ்தீப்!

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், மெர்சிடஸ் பென்ஸ் AMG G63 Wagon மாடல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். 585 குதிரை திறன் கொண்ட இந்த காரின் விலை ₹4 கோடியாகும். இது, 0-100 kmph வேகத்தை வெறும் 4.3 விநாடிகளில் எட்டும். அர்ஷ்தீப்பின் பவுலிங் வேகத்தை போன்றே காரை வாங்கியுள்ளதாக, நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
News November 12, 2025
AI கேர்ள் ஃபிரண்ட்களுடன் எச்சரிக்கையாக இருங்கள்!

AI கேர்ள் ஃபிரண்ட்கள், Anime-Style சாட்பாட்களுடன் எச்சரிக்கையாக இருக்குமாறு Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். மனிதர்களுடன் உறவுகளை மேம்படுத்த சில AI நிறுவனங்கள் சாட்பாட்களை உருவாக்குகின்றன. அதனுடன் உரையாடும் அனைத்தையும் அவை ஞாபகம் வைத்துக் கொள்ளும். அதனுடன் ஆழமான உறவை பேணுவது மனிதர்களின் சிந்தனையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


