News March 30, 2024
திருஷ்டி தோஷம் போக்கும் திருநாமம்

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் திருமண்ணுக்கு உண்டாம். ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி நெற்றியில் திருநாமம் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
Similar News
News November 28, 2025
BREAKING: சென்னைக்கு அருகில் ‘டிட்வா’ புயல்

‘டிட்வா’ புயல் வேகமாக கரையை நோக்கி நகர்ந்து வருவதாக IMD தெரிவித்துள்ளது. தற்போது, புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 KM தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 KM தொலைவிலும் உள்ளது. இது, வடக்கு-வடமேற்கில் நகர்ந்து நாளை மறுதினம் அதிகாலையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் ஒரு வாரத்திற்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $10.21 குறைந்து $4,157-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $0.46 டாலர் உயர்ந்து $53.59 ஆக உள்ளது. இந்திய சந்தையில் நேற்று, தங்கம் சவரனுக்கு ₹240 குறைந்து ₹94,160-க்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் விலை குறைவால் இன்று மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 28, 2025
விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும்: திருமாவளவன்

பாஜகவுடன் விஜய் இணக்கமாக செல்வது, அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று திருமாவளவன் கூறியுள்ளார். விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகியதற்கு பின்னால் BJP, RSS உள்ளதோ என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், அதிமுகவை பலவீனப்படுத்தும் செயலில் பாஜக இறங்கியிருப்பதாகவும் திருமா கூறியிருந்தார்.


