News March 30, 2024

திருஷ்டி தோஷம் போக்கும் திருநாமம்

image

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் திருமண்ணுக்கு உண்டாம். ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி நெற்றியில் திருநாமம் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.

Similar News

News October 28, 2025

BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிப்பு

image

கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, *காட்டாற்று ஓர சாலைகளில் பஸ்களை கவனமாக இயக்க வேண்டும். சாலைகளில் குறைவான தண்ணீர் இருந்தாலும் மாற்றுவழியை தேர்வு செய்யவும். *பஸ்களில் மழைநீர் ஒழுகுவது உள்ளிட்ட பிரச்னை இருந்தால் கிளை மேலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். *கடலோர சாலை பஸ் டிரைவர்கள் கூடுதல் கவனமாக இருங்கள்.

News October 28, 2025

SPORTS ROUNDUP: ரஞ்சியில் தமிழகம் முன்னிலை

image

*நாகாலாந்திற்கு எதிரான ரஞ்சி போட்டியில், தமிழகம் முதல் இன்னிங்ஸில் 66 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. *19 வயதுக்கு உட்பட்ட மகளிர் நட்புறவு கால்பந்தில், இந்தியா கஜகஸ்தான் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. *மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் ஒலிம்பியாடில், கிஷன் கங்கோலி தங்கம் வென்றார். *23 வயதுக்கு உட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், சுஜீத் கல்கல் தங்க பதக்கத்தை வசப்படுத்தினார்.

News October 28, 2025

RSS சர்ச்சை: கர்நாடக அரசுக்கு பின்னடைவு

image

பொது இடங்களில் 10 பேருக்கு அதிகமானோர் கூடும் நிகழ்ச்சிகளை நடத்த, தனியார் அமைப்புகள் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கர்நாடகா அரசின் உத்தரவை, அம்மாநில ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் உத்தரவு குடிமக்களின் அடைப்படை உரிமைகளை மறுப்பதாக புனஸ்சைதன்ய சேவா சமிதி என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. முன்னதாக, RSS நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கவே, இத்தகைய உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!