News August 26, 2024

சுங்கக்கட்டணம் உயர்வுக்கு திருமாவளவன் கண்டனம்

image

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்றும் கூறியுள்ளார். எளிய மக்களை கசக்கி பிழியும் இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News November 6, 2025

இந்த நாடுகளுக்கு விசா தேவையில்லை.. பறப்போமா?

image

நினைத்த நேரத்தில் பையை எடுத்துக்கொண்டு பறக்க வேண்டுமா? பாஸ்போர்ட் இருந்தால் போதும், விசா தேவையில்லை. இது உங்களுக்கு தெரியுமா? உலகின் சில நாடுகளுக்கு, இந்தியர்கள் விசா இல்லாமல் எளிதாக பயணிக்கலாம். அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் எந்த நாட்டுக்கு பறக்க போறீங்க. கமெண்ட்ல சொல்லுங்க.

News November 6, 2025

BREAKING: விடுமுறை… நாளை முதல் முக்கிய அறிவிப்பு

image

வார விடுமுறையில் மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சுமார் 1,000 சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(நவ.7) முதல் 9-ம் தேதி வரை சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். SHARE IT.

News November 6, 2025

ஓட்டுப் போட மிகவும் ஆர்வம் காட்டும் பிஹார் மக்கள்

image

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிஹார் தேர்தலில், மதியம் ஒரு மணி வரை, 42.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கத்தை விட இம்முறை பிஹார் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை வாக்குப்பதிவு சதவீதம் தெளிவாக காட்டுகிறது. அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 46.73% வாக்குகள் பதிவாகியுள்ளதாக EC தெரிவித்துள்ளது. பிஹாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!