News August 26, 2024
சுங்கக்கட்டணம் உயர்வுக்கு திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்றும் கூறியுள்ளார். எளிய மக்களை கசக்கி பிழியும் இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 19, 2025
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க, தினசரி சில உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் என்பதை மேலே உள்ள புகைப்படங்களில் குறிப்பிட்டுள்ளோம். படங்களை swipe செய்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த பயனுள்ள தகவலை உங்கள் அன்பானவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
News September 19, 2025
டெபாசிட் கட்டு.. பொதுக்கூட்டம் நடத்து: கோர்ட்

பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் அரசியல் கட்சிகளிடம் செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எந்த ஒரு பெரிய பொதுக்கூட்டங்களின் போதும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடப்பது உண்டு எனவும், அந்த இழப்பை ஈடுகட்ட பாதுகாப்பு தொகை வசூலிப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது. மேலும், இதற்கான விதிமுறைகளை போலீஸ் வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
News September 19, 2025
கோடீஸ்வர குடும்பங்கள் லிஸ்ட்: TN-க்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8.71 லட்சமாக உயர்ந்திருப்பது தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ல் 4.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை, தற்போது 90% அதிகரித்துள்ளது. 1.78 லட்சம் குடும்பங்களுடன், இந்திய கோடீஸ்வரர்களின் தலைநகராக மகாராஷ்டிரா விளங்குகிறது. தமிழ்நாடு 72,600 குடும்பங்களுடன் 3-ம் இடத்தில் உள்ளது.