News August 26, 2024

சுங்கக்கட்டணம் உயர்வுக்கு திருமாவளவன் கண்டனம்

image

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்றும் கூறியுள்ளார். எளிய மக்களை கசக்கி பிழியும் இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 5, 2025

Business 360°: டீசல் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு

image

*கடந்த ஏப். முதல் அக். வரை ₹329 கோடிக்கு சீனாவுக்கு இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது *2025-26 நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் GDP 7.4% ஆக உயரும் என அமெரிக்க நிறுவனம் கணிப்பு *கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, நவம்பரில் 85.5 லட்சம் டன் டீசல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது *இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தை சமநிலைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என பியூஸ் கோயல் உறுதி

News December 5, 2025

Sports 360°: டேக்வாண்டோவில் இந்தியாவுக்கு வெண்கலம்

image

*SUPER CUP கால்பந்து இறுதிப்போட்டிக்கு எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணிகள் முன்னேற்றம் * ILT20-ல் MI எமிரேட்ஸை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது *U-21 டேக்வாண்டோ உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிதேஷ் சிங் பிஸ்ட் வெண்கலம் வென்றார் *HCL ஸ்குவாஷ் தொடரின் ஃபைனலில் அனாஹத் சிங்-ஜோஷ்னா சின்னப்பா மோதல் *டி20 போட்டிகளில் சுனில் நரேன் 600-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்

News December 5, 2025

BREAKING: செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

image

புதுச்சேரியில் டிச.9-ல் பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரியுள்ள நிலையில், சென்னையில் உள்ள WAR ROOM-ல் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை நடத்தினார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், இனி பொதுக்கூட்டமாகவே பரப்புரையை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக முக்கிய புள்ளிகள் சிலரை தவெகவில் இணைப்பது குறித்தும் செங்கோட்டையன் ஆலோசித்துள்ளார்.

error: Content is protected !!