News August 26, 2024
சுங்கக்கட்டணம் உயர்வுக்கு திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்றும் கூறியுள்ளார். எளிய மக்களை கசக்கி பிழியும் இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 10, 2025
BREAKING: இன்று தவெகவில் இணைகிறாரா EX அமைச்சர்?

முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், OPS அணியில் இருக்கும் வைத்திலிங்கம் இன்று தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மேல் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் வைத்திலிங்கம் இணையவிருக்கிறாராம். முன்னதாக இந்த தகவல் வெளியானபோது, தவெகவில் <<18485494>>இணையவில்லை <<>>என அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 10, 2025
வீடுகளின் விலை கணிசமாக உயரும்

இந்தியாவில் வீடுகளின் விலை அடுத்த 2 ஆண்டுகளில் சராசரியாக 6% உயரும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆடம்பர வீடுகளின் விற்பனை வளர்ச்சி, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் குறைந்துவிடும். நாட்டின் முக்கிய 7 நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை – செப்டம்பரில் 9% குறைந்துள்ளது. மேலும், RBI, இதற்கு மேல் வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
News December 10, 2025
ஒரு கோடி பிஹாரிகள் TN-ல் வாக்களிப்பதா? தயாநிதி

SIR-ன் போது ECI கேட்கும் ஆவணங்களில், 13-வது ஆவணமாக, பிஹார் வாக்காளர் திருத்த பட்டியல் உள்ளதாக தயாநிதி மாறன் MP தெரிவித்துள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள், எந்த மாநில தேர்தலிலும் வாக்களிக்கலாம் என உள்ளதாகவும், இதன் மூலம் அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு கோடி பேர் TN-ல் வாக்களிக்கலாம் என அச்சம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், ECI-ன் உள்நோக்கம் புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.


