News September 28, 2025
இழப்பீட்டை ₹50 லட்சமாக உயர்த்த திருமா வலியுறுத்தல்

கரூர் அசம்பாவிதத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். போர்கால அடிப்படையில் காயம் அடைந்தவர்களுக்கு சிசிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உயிரிழந்தோருக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ₹10 லட்சம் இழப்பீட்டை, ₹50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 19, 2026
பிரபல இயக்குநர் காலமானார்!

உலகளவில் பெரும் வெற்றிபெற்ற ‘தி லயன் கிங்’ (1994) அனிமேஷன் படத்தின் இணை இயக்குநர் ரோஜர் அல்லர்ஸ்(76) உடல்நல குறைவால் காலமானார். ஹாலிவுட்டின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியின் பியூட்டி & பீஸ்ட் (1991), அலாவுதீன் (1992), ஆலிவர் & கம்பெனி (1998) போன்ற படங்களில் ரோஜர் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு பல ஹாலிவுட் நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News January 19, 2026
லடாக்கில் நிலநடுக்கம்… குலுங்கிய கட்டிடங்கள்!

பிரபல சுற்றுலாத்தலமான லடாக்கில் இன்று 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்ட தகவலின்படி, லே மற்றும் லடாக் பகுதியில் 171 கிமீ ஆழத்தில் காலை 11.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் இதுவரை அங்கு பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 19, 2026
ஆட்சியில் விசிகவுக்கு பங்கு உள்ளது: சிந்தனைச்செல்வன்

கடந்த 75 ஆண்டுகளில் சாதிக்க முடியாதவற்றை 5 ஆண்டுகளில் விசிக சாதித்துள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் கூறியுள்ளார். பட்டியலின மக்களுக்கான பல சட்டத்திருத்தத்தை விசிக கொண்டு வர வைத்துள்ளது என்ற அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக நிறைவேற்றிய நிறைய திட்டங்கள் விசிகவின் கொள்கை அரசியலில் உள்ளது என்றார். அந்தவகையில், ஆட்சி அதிகாரத்தில் விசிகவின் பங்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.


