News January 3, 2025
சிரிப்பதற்கு முன் இதை நினைச்சு பாருங்க..!

சில தருணங்களில் நமது பயத்தையும், தயக்கத்தையும், அடிபணியும் எண்ணத்தையும் மற்றவர்களுக்கு கடத்தும் கருவியாக சிரிப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான், பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்புக்கலை போட்டிகள் தொடங்கும் போது, எந்த வீரர் சிரிக்கிறாரோ, அவரே கடைசியில் பெரும்பாலும் தோல்வியை சந்திப்பதாக, மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிரிப்பு வீரர்களின் பயத்தை வெளிப்படுத்துவதாக அவர்கள் சொல்கின்றனர்.
Similar News
News December 10, 2025
BREAKING: இன்று தவெகவில் இணைகிறாரா EX அமைச்சர்?

முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், OPS அணியில் இருக்கும் வைத்திலிங்கம் இன்று தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மேல் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் வைத்திலிங்கம் இணையவிருக்கிறாராம். முன்னதாக இந்த தகவல் வெளியானபோது, தவெகவில் <<18485494>>இணையவில்லை <<>>என அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 10, 2025
வீடுகளின் விலை கணிசமாக உயரும்

இந்தியாவில் வீடுகளின் விலை அடுத்த 2 ஆண்டுகளில் சராசரியாக 6% உயரும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆடம்பர வீடுகளின் விற்பனை வளர்ச்சி, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் குறைந்துவிடும். நாட்டின் முக்கிய 7 நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை – செப்டம்பரில் 9% குறைந்துள்ளது. மேலும், RBI, இதற்கு மேல் வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
News December 10, 2025
ஒரு கோடி பிஹாரிகள் TN-ல் வாக்களிப்பதா? தயாநிதி

SIR-ன் போது ECI கேட்கும் ஆவணங்களில், 13-வது ஆவணமாக, பிஹார் வாக்காளர் திருத்த பட்டியல் உள்ளதாக தயாநிதி மாறன் MP தெரிவித்துள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள், எந்த மாநில தேர்தலிலும் வாக்களிக்கலாம் என உள்ளதாகவும், இதன் மூலம் அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு கோடி பேர் TN-ல் வாக்களிக்கலாம் என அச்சம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், ECI-ன் உள்நோக்கம் புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.


