News January 3, 2025
சிரிப்பதற்கு முன் இதை நினைச்சு பாருங்க..!

சில தருணங்களில் நமது பயத்தையும், தயக்கத்தையும், அடிபணியும் எண்ணத்தையும் மற்றவர்களுக்கு கடத்தும் கருவியாக சிரிப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான், பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்புக்கலை போட்டிகள் தொடங்கும் போது, எந்த வீரர் சிரிக்கிறாரோ, அவரே கடைசியில் பெரும்பாலும் தோல்வியை சந்திப்பதாக, மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிரிப்பு வீரர்களின் பயத்தை வெளிப்படுத்துவதாக அவர்கள் சொல்கின்றனர்.
Similar News
News January 2, 2026
பாகிஸ்தான் மோசமான அண்டை நாடு: ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தில் இருந்து மக்களை காக்க இந்தியாவிற்கு முழு உரிமை உண்டு என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சென்னை IIT-யில் பேசிய அவர், பாகிஸ்தானை ‘மோசமான அண்டை நாடு’ என விமர்சித்தார். ஒருபக்கம் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு கொண்டு, மறுபக்கம் தண்ணீர் கேட்க முடியாது என்று கூறிய அவர், இந்தியா தனது பாதுகாப்பிற்காக என்ன செய்ய வேண்டும் என யாரும் சொல்லத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
News January 2, 2026
காங்கிரஸில் இருந்து விலகல்.. தவெகவில் இணைய முடிவா?

தமிழ்நாடு காங்கிரஸின்(TNCC) சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சூர்யபிரகாசம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் அடிமை கூடாரமாக TN காங்கிரஸை மாற்ற செல்வப்பெருந்தகை முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அண்மை காலமாக விஜய்க்கு ஆதரவாக சூர்யபிரகாசம் பேசிவந்தார். TNCC அழிவின் பாதையில் பயணிப்பதாக <<18740431>>ஜோதிமணி கூறியிருந்த<<>> நிலையில், சூர்யபிரகாசத்தின் விலகல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 2, 2026
முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளித்த பங்குச்சந்தை

வார இறுதி நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்து, 85,762-க்கும், நிஃப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 26,328-க்கு வர்த்தகமாகியுள்ளது. மேலும் VI, HDFC Bank, Reliance, Coal India நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன. அதேநேரம் ITC, Shriram Finance, Nestle உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு இன்று சரிவை சந்தித்துள்ளன.


