News April 16, 2025
திலகபாமா, வடிவேல் ராவணன் சமரசம்

அன்புமணியை பாஜக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியது ஜனநாயக படுகொலை என்று திலகபாமா கடுமையாக விமர்சித்தார். இதனால், ஆத்திரமடைந்த வடிவேல் ராவணன், பாமகவில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார். இது பாமகவில் உள்கட்சி மோதலுக்கு மேலும் வழிவகுத்தது. இந்நிலையில் இருவரையும், தனது இல்லத்திற்கு அழைத்து அன்புமணி சமரசம் செய்து வைத்து, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Similar News
News November 19, 2025
BREAKING: சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

சென்னையில் சவுகார்பேட்டை, கோடம்பாக்கம், அம்பத்தூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலே ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News November 19, 2025
ஊளையிடும் நரிக்கு பதில் சொல்ல வேண்டுமா? வைகோ

பல நூறு கோடி சொத்துகளை வைகோ குவித்து விட்டதாக மதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மல்லை சத்யா குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த வைகோ, செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன் நான். அரசியலுக்கு வந்து பல சொத்துக்களை இழந்திருக்கிறேன். புனித இலக்கை நோக்கிய நெடுந்தூர பயணத்தில் இருக்கிறேன். அப்போது, ஒரு நரி ஊளையிட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்
News November 19, 2025
வைகுண்ட ஏகாதசிக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட்களை ஆன்லைனில் மட்டுமே வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பரமபத வாசல் தரிசனத்திற்கு, நேரடி டோக்கன்கள் வழங்கும் திட்டமில்லை என தேவஸ்தானம் கூறியுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில், தரிசனத்திற்கான டிக்கெட்களை குலுக்கல் முறையில் வழங்கவும் தீர்மானித்து உள்ளது.


