News September 30, 2025

இவர்களுக்கு ₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது!

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, TNPSC அண்மையில் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தினர், மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தால் இனி ₹1,000 கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பயனாளிகளை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நீக்க உள்ளார்களாம். SHARE IT.

Similar News

News September 30, 2025

வாயில் முதலையுடன் ராட்சத டைனோசர்

image

அர்ஜென்டினாவில் சுமார் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதிய டைனோசர் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டைனோசரின் தாடைகளுக்கு இடையே முதலையின் கை எலும்பு இருந்துள்ளது. 23 அடி (7 மீட்டர்) நீளமுள்ள இந்த டைனோசரின் மண்டை ஓடு, கைகால்கள் மற்றும் வால் பகுதிகள் கிடைத்துள்ளது. மேலே, இந்த பெரிய ராட்சத டைனோசரின் போட்டோக்கள் உள்ளன. ஸ்வைப் செய்து பாருங்க.

News September 30, 2025

கூட்ட நெரிசலுக்கு ஆம்புலன்ஸ் காரணமா? அரசு விளக்கம்

image

கரூர் கூட்ட நெரிசலுக்கு ஆம்புலன்ஸ் அடிக்கடி வந்ததே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அதற்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. பரப்புரை பகுதியில் 6 ஆம்புலன்ஸ்கள் இருந்ததாகவும், மயங்கியவர்களுக்கு சிகிச்சை தேவை என அழைப்பு வந்ததால் கூட்டத்திற்குள் 7.20, 7.30 மணிக்கு ஆம்புலன்ஸ் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலுக்கு பிறகே தனியார் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன என்றும் அரசு கூறியுள்ளது.

News September 30, 2025

உங்க செல்போனில் உடனே இதை செக் பண்ணுங்க…

image

நாம் பயன்படுத்தும் மொபைல் போன் ரேடியோ அலை(RF) கதிர்வீச்சை வெளியிட்டுக் கொண்டே உள்ளது. இதை உடல் ஓரளவுக்கே தாங்கும். அளவுக்கு அதிகமான RF அலைகளை உடல்செல்கள் உட்கவர்ந்தால், கண்கள் மற்றும் விதைப்பைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை SAR என்ற அளவீட்டில் அளக்கிறார்கள். செல்போன்களின் SAR அளவு 1.6 W/kg வரை மட்டுமே பாதுகாப்பானது என அரசு வரையறுத்துள்ளது. உங்கள் போனின் SAR என்ன என்பதை <<15478395>>இப்படி செக்<<>> பண்ணுங்க.

error: Content is protected !!