News September 30, 2025
இவர்களுக்கு ₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, TNPSC அண்மையில் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தினர், மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தால் இனி ₹1,000 கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பயனாளிகளை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நீக்க உள்ளார்களாம். SHARE IT.
Similar News
News March 17, 2026
ஈரான் தலைவர் ஓர் தன்பாலின ஈர்ப்பாளர்: US உளவுத்துறை

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என US உளவுத்துறை நம்புவதாக New York Post தெரிவித்துள்ளது. அவர், தனது சிறுவயதில் ஆசிரியர் ஒருவருடன் உறவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி டிரம்ப்பிடம் கூறியபோது அவர் சிரித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஈரானில் ஓரினச்சேர்க்கை குற்றம் என இருக்கும் நிலையில், இந்த தகவல் தற்போது சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
News March 17, 2026
பள்ளியிலேயே மாணவிகள் மது குடிக்கும் காட்சி..EPS வேதனை

சென்னையில் திமுக ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பேசிய EPS, திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒட்டுமொத்த TN மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சட்டினார். பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்டு சாடிய அவர், பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் காட்சியை பார்க்கையில் வேதனையளிப்பதாக தெரிவித்தார். மேலும், கிட்னி திருட்டு, மணல் கொள்ளையை திமுக அரசு தடுக்கவில்லை என்றார்.
News March 17, 2026
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்.. ஹேப்பி நியூஸ்

ஜூன் மாதம் வரையிலான ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை மாநிலங்கள் முன்கூட்டியே எடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோதுமை, அரிசி ஏப்.1 வரைக்குமான தேவைப்படும் கையிருப்பு அளவை விட சுமார் 185% அதிகமாக இருக்கிறது. அதிக அளவு தானியங்கள் இருப்பு உள்ளதாலும், அடுத்த சில வாரங்களில் புதிய கோதுமை கொள்முதல் தொடங்கும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது


