News June 10, 2024
இலங்கை சென்றால் கொன்று விடுவார்கள்: மதுரை ஆதீனம்

பிரதமரை நேரில் சந்தித்து தமிழீழம் கேட்கப்போவதாக, மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், தான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என்றார். இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு தமிழர்கள் வாக்களித்திருப்பது வருத்தம் எனவும், அதனால்தான், அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
Similar News
News November 11, 2025
கிரிக்கெட் வீராங்கனை பெயரில் ஸ்டேடியம்!

உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியில் சிறந்த பினிஷராக திகழ்ந்தவர் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ். இந்நிலையில், அவரது பெயரில் மேற்கு வங்கத்தில் ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அம்மாநில CM மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முன்னதாக, மாநில அரசின் உயரிய விருதான பங்கா பூஷன் விருதும், காவல்துறையில் DSP பணியும் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்

TN அரசுத்துறைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டித் தேர்வுகளில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறும் சி, டி பிரிவு பணியிடங்களுக்கான அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
குண்டு வெடிப்புக்கு மோடி, அமித்ஷா பொறுப்பு: திருமா

நாட்டின் தலைநகரிலேயே, உயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவமுடிந்தது என திருமா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


