News January 24, 2025
கட்சி ஆரம்பித்த உடன் ஆட்சிக்கு வரனும்னு நினைக்கிறாங்க: CM

ஆட்சிக்கு வர வேண்டுமென தொடங்கப்பட்ட இயக்கமல்ல திமுக, மக்களுக்காக உழைக்க தொடங்கப்பட்டது என CM ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சி ஆரம்பித்த உடன் ஆட்சிக்கு வர வேண்டுமென சிலர் நினைப்பதாகவும், அநாதை நிலையில் சுற்றித் திரிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென நினைப்பதாகவும் கடுமையாகவும் சாடியுள்ளார். நாட்டு மக்களுக்காக உழைப்பது போல் நாடகம் போடுபவர்கள் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
ஹீமோகுளோபின் குறைவாக இருக்கா.. இதை சாப்பிடுங்க

ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். இதன் அளவு மிகக் குறைவாக இருந்தால், நுரையீரலில் இருந்து திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் பெறாமல் போகலாம். இதனால் சோர்வு, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க என்ன சாப்பிடலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
5 புதிய பொருள்களுக்கு புவிசார் குறியீடு PHOTOS

தமிழ்நாட்டில் மேலும் 5 புதிய பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருள்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. 5 புதிய பொருட்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. தமிழகத்தின் பெருமையை SHARE பண்ணுங்க.
News December 3, 2025
ரெட் அலர்ட்.. நாளை பள்ளிகள் விடுமுறையா?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால், வட சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கனமழை எச்சரிக்கையால் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை நீடிப்பதால் நாளை விடுமுறை விட வாய்ப்புள்ளது.


