News April 29, 2024

எனது குரலைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்

image

சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோயர்களை வைத்திருப்பவர்களில் தான் முதலிடத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பாகல்கோட்டில் பிரசாரம் செய்த அவர், தான் சமூக வலைதளங்களை நேர்மறையாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். ஆனால், தேர்தலில் தோற்றவர்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனது குரலைப் போலியாக உருவாக்கித் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

Similar News

News August 13, 2025

ஆக.15ம் தேதி டாஸ்மாக் மூடல்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இயங்கும் டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, சம்பந்தப்பட்ட மதுபான பார்களுக்கான உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

ஸ்ரீதேவியின் 27வது பிறந்தநாள்.. போனி கபூர் உருக்கம்

image

1990-ல் ஸ்ரீதேவியின் 27-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடந்திருக்கிறது. அப்போது வயது ஏறினாலும், இளமை குறையவில்லை என்பதை குறிப்பதற்காக அவரிடம் ’26-வது பிறந்தநாள் வாழ்த்துகள்’ என கூறியுள்ளார் போனி கபூர். ஆனால் ஸ்ரீதேவியோ போனி கபூர் கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டார். இச்சம்பவத்தை ஸ்ரீதேவியின் 62-வது பிறந்தநாளான இன்று நினைவுகூர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போனி கபூர் பதிவிட்டுள்ளார்.

News August 13, 2025

விமர்சிக்காதீங்க, ஆதரவு தாங்க: சேகர் பாபு

image

திமுக அளித்த வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை என்பதே தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில், அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு, அறிவிக்கப்படாத பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களை விமர்சிக்காமல், அதன் நன்மைகளை புரிந்துகொண்டு ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!