News April 23, 2025

அவர்கள் மனிதர்கள் அல்ல… விலங்குகள்: உமர் அப்துல்லா

image

தங்கள் மாநிலத்திற்கு விருந்தினர்களாக வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அருவருப்பானது என J&K CM உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மனிதர்கள் அல்ல, விலங்குகள் எனவும், அவர்களை கண்டிக்க வார்த்தைகள் மட்டும் போதாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சமீப காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகவும் கொடியது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 17, 2025

BREAKING: விஜய் உடன் சந்திப்பு.. கண்ணீர் மல்க ஆறுதல்!

image

கரூர் வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வந்த மதியழகன், பவுன்ராஜை விஜய் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, எதையும் சமாளிப்போம், நான் இருக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். மேலும், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலைமையை அவ்வப்போது தன்னிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், விரைவில் அவர்களை சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது, மதியழகனை கண்ணீர் மல்க கட்டியணைத்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.

News October 17, 2025

புதிய அடிமைகளை வலைவீசி தேடும் பாஜக: உதயநிதி

image

பாஜகவுக்கு பழைய அடிமைகள் போதவில்லை என புதிய அடிமைகளை வலைவீசி தேடி வருவதாக உதயநிதி சாடியுள்ளார். சென்னையில் பேசிய அவர், வரும் தேர்தலிலும் சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார். உதயநிதியின் பேச்சு, திமுகவினரை உத்வேகப்படுத்தினாலும், எதிர்க்கட்சிகளை அடிமைகள் என தொடர்ந்து அவர் விமர்சிப்பது அரசியல் களத்தில் சர்ச்சையாக வெடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

News October 17, 2025

இந்தியாவும் இலங்கையும் ஒரே குடும்பம்: இலங்கை PM

image

இந்தியாவை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை மண்ணில் நடக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என அந்நாட்டு PM ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். கஷ்ட காலத்தில் இந்தியா இலங்கைக்கு செய்த உதவியை மறக்க முடியாது என்ற அவர், இருநாடுகளுக்கும் இடையே வலுவான உறவும், பரஸ்பர மரியாதையும் உள்ளதாக கூறினார். மேலும், முரண்பாடுகள் இருந்தாலும் இருநாடுகளும் எப்போதும் ஒரு குடும்பமாகவே இருந்து வருகின்றன என தெரிவித்தார்.

error: Content is protected !!