News October 25, 2024

இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை வெளுத்து வாங்கப் போவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரி, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அலர்ட் கொடுத்துள்ளது.

Similar News

News July 8, 2025

மழைக் காலத்தில் இதை கவனியுங்க…

image

பைக், கார் வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வண்டிக்கு தேவையான காப்பீடு அம்சங்களை உள்ளடக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி (காலாவதி ஆகாமல்) இருப்பதை உறுதிச் செய்துகொள்ளுங்கள். மழையில் வாகனம் அழுக்காக போகிறது என்பதால், மழை முடிந்தபின் சர்வீஸ் செய்துகொள்ளலாம் என அசட்டையாக இருந்தால், பழுது ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருங்கள்!

News July 8, 2025

ரூபாய் நோட்டு அச்சிட இதெல்லாம் பாக்கணும்

image

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை பின்வரும் காரணிகள் அடிப்படையில் தான் கணக்கிட்டு அச்சடிக்கிறது: *பழைய நோட்டுகளை அகற்றுதல் *மாற்றீடு செய்யும் தேவை *இருப்பு தேவை *பொருளாதார வளர்ச்சி விகிதம் *உற்பத்தி விகிதம் *கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை தடுத்தல் *தங்கம் இருப்பு உள்ளிட்ட காரணிகளை ஆராய்ந்து, எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அளவை ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.

News July 8, 2025

முடிவுக்கு வரும் மாறன் சகோதரர்களின் பிரச்னை?

image

<<16753727>>மாறன் சகோதரர்களிடையேயான சொத்துப் பிரச்னையில்<<>> CM ஸ்டாலின் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் நேரில் சந்தித்த அவர், ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் செயல்பட அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தம்பி தயாநிதி மாறனுக்கு கூடுதல் பங்குகளை விட்டுக்கொடுக்க கலாநிதி மாறன் முன்வந்திருக்கிறாராம். ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

error: Content is protected !!