News December 31, 2024

நாளை முதல் இந்த வங்கிக் கணக்குகள் செயல்படாது

image

மோசடி உள்ளிட்டவற்றை தடுக்க வங்கிக் கணக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி புதுப்புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாளை (ஜன.1) முதல் 3 வகை வங்கிக் கணக்குகள் செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2 ஆண்டுகள் (அ) கூடுதலான நாள்கள் பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள், 12 மாதத்திற்கு மேல் பயன்படுத்தப்படாத கணக்குகள், குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் கணக்கில் பணமில்லாத வங்கிக் கணக்குகள் செயல்படாது.

Similar News

News August 21, 2025

மசோதாவை வாசிக்க கூட நேரம் தருவதில்லை: கனிமொழி

image

PM, CM குற்றம் புரிந்தால் பதவிநீக்கம் செய்வதற்கான மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதுபற்றி பேசிய கனிமொழி, எதிர்க்கட்சிகளுக்கு மசோதாக்களை வாசிக்கக்கூட கால அவகாசம் தராமல், கூட்டத்தொடரின் கடைசி நாளில் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யும் பழக்கத்தை மத்திய அரசு வழக்கமாக செய்வதாக குற்றம் சுமத்தினார். ஜனநாயகத்தை சீர்குலைக்க குறிக்கோளோடு மத்திய அரசு செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

News August 21, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 21 – ஆவணி 5 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 12:00 AM – 1:00 AM ▶ கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: திதித்துவம் ▶ சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.

News August 21, 2025

கர்நாடகாவை போல் TN அரசு செயல்படவில்லை: அன்புமணி

image

சமூகநீதியை CM ஸ்டாலின் குழித்தோண்டி புதைப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 183 நாள்களில் சாத்தியமானதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா அரசு காட்டிய வேகத்தை வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் TN அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் காட்டவில்லை என அன்புமணி குற்றம்சுமத்தியுள்ளார்.

error: Content is protected !!