News December 31, 2024
நாளை முதல் இந்த வங்கிக் கணக்குகள் செயல்படாது

மோசடி உள்ளிட்டவற்றை தடுக்க வங்கிக் கணக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி புதுப்புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாளை (ஜன.1) முதல் 3 வகை வங்கிக் கணக்குகள் செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2 ஆண்டுகள் (அ) கூடுதலான நாள்கள் பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள், 12 மாதத்திற்கு மேல் பயன்படுத்தப்படாத கணக்குகள், குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் கணக்கில் பணமில்லாத வங்கிக் கணக்குகள் செயல்படாது.
Similar News
News November 21, 2025
ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து

கரூர் அசம்பாவிதத்தை அடுத்து, Gen Z தலைமுறையின் போராட்டத்தை குறிப்பிட்டு தவெகவின் ஆதவ் அர்ஜுனா X-ல் பதிவிட்டார், பின்னர் நீக்கினார். இதனால், வன்முறையை தூண்டும் வகையில் ஆதவ் பதிவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை HC ரத்து செய்துள்ளது. விசாரணையின்போது, உள்நோக்கத்துடன் இக்கருத்து பதிவிடவில்லை என ஆதவ் தரப்பில் HC-ல் வாதிடப்பட்டது.
News November 21, 2025
தொடர் விடுமுறை.. தமிழக அரசு HAPPY NEWS

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையில் ஊருக்கு சொகுசாக போக எண்ணுபவர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அரசு கொள்முதல் செய்துள்ள ‘மல்டி ஆக்சில்’ சொகுசு பஸ்களை விரைந்து இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டிச.20-ம் தேதிக்குள் முதல்வரிடம் ஒப்புதல் பெற்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொகுசாக ஊருக்கு போக ரெடியா மக்களே!
News November 21, 2025
ரோடு ஷோவுக்கு வழிகாட்டுதல்கள் ரெடி

ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை மெட்ராஸ் HC-ல் TN அரசு சமர்ப்பித்துள்ளது. நிகழ்விடத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பே மக்கள் கூடுவதை தவிர்க்குமாறும், அனுமதி விண்ணப்பத்தில் தலைமை விருந்தினர்களின் வருகை&புறப்படும் நேரத்தை குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரே பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.


