News March 21, 2025
ஐபிஎல் களத்தில் அதிக சிக்சர் பறக்கவிட்டது இவர்களே…!

பறக்கும் பந்துகள், சிதறடிக்கப்படும் பந்துவீச்சு என பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்சர்கள் விளாசியவர் கிறிஸ் கெய்ல். யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் அவர், 142 போட்டிகளில் விளையாடி 357 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். 2ம் இடத்தில் 280 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா உள்ளார். கோலி( 272), தோனி( 252), டி வில்லியர்ஸ்( 251) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
Similar News
News July 8, 2025
கொடூரத்தின் உச்சம்.. ரயிலில் பெண் கூட்டு பலாத்காரம்

நாள்தோறும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்கள் குலைநடுங்க வைக்கின்றன. ஹரியானாவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பெண்ணை கும்பலாக பலாத்காரம் செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரத்தை அரங்கேற்றிய பிறகு, கொடூரர்கள் அந்த பெண்ணை தண்டவாளத்தில் வீசியுள்ளனர். அப்போது, மற்றொரு ரயில் ஏறியதால் அந்த பெண்ணின் கால் துண்டாகியுள்ளது. இதுக்கெல்லாம் எப்போதுதான் தீர்வு கிடைக்கும்?
News July 8, 2025
90% மூளை இல்லாமலும் சாதாரண வாழ்க்கை… எப்படி?

பிரான்சில் 44 வயதான ஒருவர் குடும்பம், வேலை என சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு திடீரென ஒரு நாள் தீராத கால் வலி ஏற்பட ஹாஸ்பிடலுக்கு சென்றுள்ளார். அவரது ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளையின் 90% பாகத்தை காணவில்லை. இதனை ஹைட்ரோசெபலஸ் (Hydrocephalus) என்பார்கள். அதாவது, மூளைக்குள் சீராக இருக்க வேண்டிய தண்டுவட திரவம் (CSF) அதிகமாகச் சேர்ந்து, மூளை அமைப்புகளை அழுத்துவதால் இப்படியான நிலை ஏற்படுகிறது.
News July 8, 2025
பெண்களுக்கு அரசு வேலைகளில் 35% இட ஒதுக்கீடு!

அனைத்து அரசு துறை பணிகளிலும் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பிஹார் CM நிதிஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள அம்மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அவர் இந்த அறிவிப்பை கொடுத்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க & அதற்கான பயிற்சியை கொடுக்க பிஹார் யூத் கமிஷன் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.