News March 21, 2025
ஐபிஎல் களத்தில் அதிக சிக்சர் பறக்கவிட்டது இவர்களே…!

பறக்கும் பந்துகள், சிதறடிக்கப்படும் பந்துவீச்சு என பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்சர்கள் விளாசியவர் கிறிஸ் கெய்ல். யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் அவர், 142 போட்டிகளில் விளையாடி 357 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். 2ம் இடத்தில் 280 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா உள்ளார். கோலி( 272), தோனி( 252), டி வில்லியர்ஸ்( 251) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
Similar News
News September 10, 2025
BREAKING: கூட்டணியில் இணைகிறேன்.. TTV ட்விஸ்ட்

TTV, OPS மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று நயினார், அண்ணாமலை நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், NDA கூட்டணி முதல்வர் வேட்பாளரான EPS-ஐ மாற்றினால், கூட்டணியில் இணைவதாக TTV அறிவித்துள்ளார். இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத BJP தலைமை, செங்கோட்டையனை போல், தினகரனையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்கான அசைன்மென்ட் அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
News September 10, 2025
செப்.12-ல் சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணன் வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில், அவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகும் 3வது துணை ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
News September 10, 2025
12 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மழை நேரத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.