News October 6, 2025
நாட்டில் பாதுகாப்பில்லாத நகரங்கள் இவை தான்

இந்தியாவின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியலை NCRB வெளியிட்டுள்ளது. 2023-ல் நடந்த குற்றங்களின் புள்ளிவிவரம் அடிப்படையில், ஒரு லட்சம் பேருக்கு எத்தனை குற்றங்கள் நடக்கின்றன என்ற அடிப்படையில் இந்த தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் பாதுகாப்பற்ற டாப் 9 நகரங்களை மேலே பட்டியலிட்டுள்ளோம். SWIPE செய்து பாருங்கள். இதை பிறருக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News October 6, 2025
காந்தாரா 1 மூச்சடைக்க வைத்தது: அண்ணாமலை

காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஒவ்வொரு காட்சியும் தன்னை மூச்சடைக்க வைத்ததாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இது ஒரு உலக தரமான படைப்பு என பாராட்டிய அவர், துளு நாட்டின் கலாச்சாரம், பஞ்சுர்லி, குலிகா தெய்வ வழிபாடு போன்றவற்றை கொடுத்த ரிஷப் ஷெட்டியின் நடிப்பையும், இயக்கத்தையும் வெகுவாக பாராட்டினார். IPS-ஆக பணிபுரிந்த போது, தான் நேரில் பார்த்த மரபுகளை எண்ணி பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
News October 6, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு முக்கிய தகவல்

தனியாக வசிக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசு விதிப்படி, அவர்களும் ₹1,000 பெற தகுதியானவர்களே. தனியாக வசிக்கிறேன் என குறைதீர் முகாமில் மனு கொடுத்து முதலில் ரேஷன் கார்டு பெற வேண்டும். இதனையடுத்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆவணங்களை சரிபார்த்த பிறகு அரசு பணம் வழங்கும். SHARE IT.
News October 6, 2025
அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு: அரசு பரிசீலனை

கரூர் துயரத்தின் எதிரொலியாக அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி அரசியல் கூட்டங்களில் பெண்களுக்கு தனி இடம், அரசியல் கூட்டத்தில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்க தடை, கூட்டத்திற்கு பின் குப்பைகளை கட்சியினரே அகற்ற வேண்டும், காலி இடங்களில் மட்டுமே அரசியல் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.