News April 27, 2025
வீட்டில் சாமி கும்பிடும் போது இந்த 3 விஷயங்கள் முக்கியம்

வீட்டில் கடவுளை தூய மனதுடன் வழிபட முடியவில்லை, பூஜை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு கர்ம வினையே தான் காரணம் எனப்படுகிறது. இதிலிருந்து விடுபட இந்த 3 விஷயங்களை பின்பற்ற வேண்டும். இதை ‘ திரிகரண சுத்தி’ என்கிறார்கள். அதாவது வழிபடும் போது, மனதில் நல்ல எண்ணங்களை நிலைநிறுத்தி, கைகளால் பூக்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை உச்சரித்து கடவுளை பூஜிக்க வேண்டும். SHARE IT.
Similar News
News November 13, 2025
உலக சந்தையில் ‘Made in India’ உரக்க ஒலிக்கும்: PM

மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ₹25,060 கோடிக்கான ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்திற்கு (EPM) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள PM மோடி, இந்த ஒப்புதல் மூலம் உலக சந்தையில் ‘Made in India’ உரக்க ஒலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஏற்றுமதியின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் என்றும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
டெல்லி தாக்குதல் தீவிரவாதிகளின் சதி: USA

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என அமெரிக்க செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து இந்தியா சிறப்பாக விசாரணை நடத்துவதாகவும், விரைவில் உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். மேலும் மிகப்பெரிய சதித்திட்டம் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாக தெரிவித்த அவர், விசாரணையின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில், மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.


