News April 27, 2025
வீட்டில் சாமி கும்பிடும் போது இந்த 3 விஷயங்கள் முக்கியம்

வீட்டில் கடவுளை தூய மனதுடன் வழிபட முடியவில்லை, பூஜை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு கர்ம வினையே தான் காரணம் எனப்படுகிறது. இதிலிருந்து விடுபட இந்த 3 விஷயங்களை பின்பற்ற வேண்டும். இதை ‘ திரிகரண சுத்தி’ என்கிறார்கள். அதாவது வழிபடும் போது, மனதில் நல்ல எண்ணங்களை நிலைநிறுத்தி, கைகளால் பூக்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை உச்சரித்து கடவுளை பூஜிக்க வேண்டும். SHARE IT.
Similar News
News January 3, 2026
70 ஆண்டுகளை கடந்தும் பேசப்படும் ‘ரத்தக்கண்ணீர்’

‘அடியே காந்தா’ என்ற வசனம் தற்போது நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டாலும், இந்த வசனம் இடம்பெற்ற படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நீங்கவில்லை. M.R.ராதாவின் தனித்துவமான நடிப்பு இன்றும் ரசிக்கப்படுகிறது. திருவாரூர் தங்கராசு எழுத்தில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் உருவான ‘ரத்தக்கண்ணீர்’, தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் கிளாசிக் படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. படத்தில் பிடித்த சீன் எது?
News January 3, 2026
FLASH: வெனிசுலா அதிபர் சிறை பிடிப்பு

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் சிறை பிடித்து நாடு கடத்திவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அரசியல் சாசனம் மற்றும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, <<18750130>>வெனிசுலா மீது தாக்குதல்<<>> நடத்தப்பட்டதாகவும், சில மணி நேரங்களிலேயே மதுரோ சிறைபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெனிசுலா தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News January 3, 2026
இந்த காய் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

காய்கறிகள் சாப்பிடுவதால் உங்கள் உயிரே போகலாம் என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், முட்டைகோஸ், கத்திரிக்காய், காலிஃபிளவர், கீரை போன்ற காய்கறிகளில் இருக்கும் நாடபுழுக்கள் தற்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனை சரியாக கழுவாமல் சாப்பிட்டால், புழுக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து, மூளைக்கு சென்றடையும். பிறகு, வலிப்பு, தலைவலியில் தொடங்கி உயிரையே பறிக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.


