News August 5, 2025
இன்று எந்த திடீர் அறிவிப்பும் வராது: உமர் உறுதி

ஜம்மு & காஷ்மீருக்கு இன்று மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற யூகங்களை J&K CM உமர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஆனால் வரும் காலங்களில் அது நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். J&K யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைமுன்னிட்டு PM மோடி, அமித்ஷா இருவரும் நேற்று ஜனாதிபதியை சந்தித்ததால் மேற்கூறிய யூகங்கள் பரவியது.
Similar News
News August 5, 2025
தலைமறைவாக இருந்த நடிகை கைது

நடிகை மீரா மிதுனை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியில் வந்த அவர், கோர்ட்டுக்கு வராமல் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய சென்னை முதன்மை கோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது.
News August 5, 2025
காஷ்மீரில் வட்டமிடும் போர் விமானங்கள்.. என்ன நடக்கிறது?

இந்திய விமானப்படையின் போர் விமானங்களை நள்ளிரவு முதல் அடிக்கடி பார்க்க முடிவதாக காஷ்மீர் மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று அம்மாநிலம் 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட தினம் என்பதால் பாதுகாப்பு கருதி போர் விமானங்கள் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜம்மு & காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படலாம் என நேற்று முதல் செய்திகள் வருவதால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News August 5, 2025
டால்ஸ்டாய் பொன்மொழிகள்

*அனைத்தையும் நேசிக்க முடிந்ததால் தான் என்னால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. *எதுவும் தெரியாது என்ற நிலையே மனித ஞானத்தின் மிக உயர்ந்த நிலை. *பொறுமை மற்றும் நேரம் தான் 2 சக்திவாய்ந்த போர்வீரர்கள். *மகிழ்ச்சி என்பது வெளிப்புற விஷயங்களைச் சார்ந்தது அல்ல, அது நாம் அவற்றைப் பார்க்கும் விதத்தில் உள்ளது. *ஒவ்வொருவரும் உலகை மாற்ற நினைக்கிறார்கள், ஆனால் யாரும் தன்னை மாற்ற நினைப்பதில்லை.