News February 17, 2025

கோடையில் கரன்ட் கட் ஆகாது… மின்வாரியம் நடவடிக்கை

image

வெயில் காலத்தில் மாநிலத்தின் மின்சாரத் தேவை 22,000 MW ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, 8,525 MW மின்சாரத்தை வெளிச் சந்தையில் வாங்க மின்வாரியத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை TANGEDCO தொடங்கவுள்ளது. இதன்மூலம், வீடுகளுக்கு கோடையில் மின்தடை ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

Similar News

News November 18, 2025

Delhi Blast: மேலும் ஒருவர் கைது

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஜஸிர் பிலால் வாணி என்பவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி உமர் நபியுடன் தொடர்புடையவர் என்று NIA கூறியுள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு உமர் நபியுடன் சேர்ந்து ஜஸிர் பிலால் வாணி சதி திட்டம் தீட்டியதாகவும் ராக்கெட், டிரோன்களை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

News November 18, 2025

Delhi Blast: மேலும் ஒருவர் கைது

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஜஸிர் பிலால் வாணி என்பவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி உமர் நபியுடன் தொடர்புடையவர் என்று NIA கூறியுள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு உமர் நபியுடன் சேர்ந்து ஜஸிர் பிலால் வாணி சதி திட்டம் தீட்டியதாகவும் ராக்கெட், டிரோன்களை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

News November 18, 2025

எதிர்க்கட்சித் தலைவரானார் தேஜஸ்வி யாதவ்

image

பிஹார் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்க, மொத்தமுள்ள தொகுதிகளில் 10%-க்கு மேல் வெற்றிபெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், 243 தொகுதிகள் கொண்ட பிஹாரில், 143 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இடங்களில் RJD வெற்றிபெற்றிருந்தது.

error: Content is protected !!