News March 14, 2025
மருந்து தட்டுப்பாடு கூடாது; அமைச்சர் உத்தரவு

முதல்வர் மருந்தகங்களில் தட்டுப்பாடு இன்றி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவிட்டுள்ளார். மருந்தகங்களில் வாடிக்கையாளர்களை மரியாதையோடு நடத்துமாறும், கேட்கும் மருந்துகள் இல்லை என திருப்பி அனுப்பாமல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். தேவையான மருந்துகள் 48 மணி நேரத்துக்குள் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
Similar News
News March 14, 2025
TN Budget: அரசு ஊழியர்களுக்கு 5 முத்தான அறிவிப்புகள்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட <<15757548>>EL விடுப்பு பணம்<<>> பெறுதல் முறை வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது. *சென்னையில் ₹110 கோடியில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு. *அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் ₹1 கோடி விபத்து காப்பீடு.*அரசு அலுவலரின் பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக ₹5 லட்சம் வங்கி நிதியுதவி.*பணிக் காலத்தில் எதிர்பாராமல் மரணமடைந்தால் ஆயுள் காப்பீடாக ₹10 லட்சம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
News March 14, 2025
மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்த திமுக

தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளதை காட்டுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அரசின் கடனும், ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகளும் உயர்ந்துள்ளதாக சாடிய அவர், திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
News March 14, 2025
IPL-க்கு எதிராக ஆள் சேர்க்கும் பாகிஸ்தான்

ஐபிஎல் தொடருக்கு வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை அனுப்பக்கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் கேட்டுக்கொண்டுள்ளார். பிசிசிஐ இந்திய வீரர்களை மற்ற நாடுகள் நடத்தும் லீக்கில் பங்கேற்க அனுமதிக்காதபோது நீங்கள் மட்டும் ஏன் அனுமதிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பாண்டு IPL நடைபெறும் அதேநேரத்தில் PPL-லும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.