News September 30, 2025

உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது: ஹேமமாலினி MP

image

பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை என கரூரில் ஆய்வு செய்த MP ஹேமமாலினி சாடியுள்ளார். பெரிய இடம் கொடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது எனவும் கூறியுள்ளார். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் விபத்துபோல் இல்லை என தெரிவித்த அவர், உள்நோக்கம் இருப்பதுபோல் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 30, 2025

விஜய் செய்தது சரியா? அதிகரிக்கும் விமர்சனங்கள்

image

கரூர் துயரம் நடந்து 3 நாள்களுக்கு பின் இன்று வீடியோ வெளியிட்ட விஜய், 41 பேர் மரணத்திற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவித்தார். ஆனால், மன்னிப்பு கேட்கவில்லை. இதை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். இவ்வளவு பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் அதற்கு தார்மிகப் பொறுப்பு ஏற்கவோ, அந்த பாதிப்புக்கு மன்னிப்பு கேட்கவோ செய்யாதது, பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல் என பலரும் விமர்சித்துள்ளனர்.

News September 30, 2025

ஆயுத பூஜையில் கண்டிப்பாக வைக்க வேண்டிய பொருள்கள்!

image

எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், அதற்கு உதவும் கருவி, பொருளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அலங்கரியுங்கள். மேலும் வீட்டு உபயோக கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி போன்றவற்றுக்கும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும். ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் ஒரே நேரத்தில் வருவதால், பூஜையறையில் புத்தகங்கள், பேனாக்கள் ஆகியவற்றையும் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

News September 30, 2025

பிரபல தமிழ் நடிகர் மனைவியை பிரிந்தார்… DIVORCE

image

ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2013-ல் திருமணம் செய்து கொண்ட இருவரும், கடந்த ஆண்டு மண வாழ்வில் கசப்பு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து கோரியிருந்தனர். பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் கூறிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், தனது குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் ஆட்சேபனை இல்லை என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

error: Content is protected !!