News April 12, 2025
CSK ரசிகர்களுக்கு இதை விட சோகம் வேறேதும் இல்லை..!

CSK அணி, இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விஷயம் என்னவென்றால், எந்த ஒரு IPL சீசனிலும் CSK தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்றதில்லை. வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. ரசிகர்களுமே இதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் தவித்து போய் இருக்கின்றனர். இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?
Similar News
News December 26, 2025
BREAKING: விஜய் கட்சி சின்னம் இதுவா..!

2026 தேர்தலில் தவெகவிற்கு என்ன சின்னம் வழங்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆட்டோ, விசில் உள்ளிட்ட பரிந்துரைகளை ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் தவெக வழங்கியிருந்தது. இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு ’அருமையான சின்னம் நமக்கு கிடைச்சிருக்கு. ஆனால் இப்போது சொல்லமாட்டோம்’ என KAS பேசியது குறிப்பிடத்தக்கது.
News December 26, 2025
காலணி தொழிற்சாலையை ஆய்வு செய்த CM ஸ்டாலின்!

உளுந்துார்பேட்டை சிப்காட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் காலணி தொழிற்சாலையை CM ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். ₹1,350 கோடி மதிப்பிலான தொழிற்சாலையின் 50% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் ₹139 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் ஆபிஸ் உட்பட ₹1,774 கோடியில் 314 முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தார். பின்னர், 2.16 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
News December 26, 2025
ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு மீண்டும் CBI சம்மன்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த CBI விசாரணை சமீப நாள்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை டிச.29-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனுக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.


