News September 21, 2025
போக்சோவில் புகாரளிக்க கால நிர்ணயம் கிடையாது: கோர்ட்

மைனராக இருந்த போது நடந்த பாலியல் குற்றங்களுக்கு, மேஜரான பின்பும் புகார் அளிக்கலாம் என மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. போக்சோ வழக்கில் புகார் அளிப்பதற்கு கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை எனவும், குற்றவாளிகள் பெரும்பாலும் தெரிந்த நபர்களாக இருப்பதால், குழந்தைகளால் புகார் அளிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மேஜரான பின்னரும் அதிர்ச்சியை சுமப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 21, 2025
மீண்டும் பொதுக்குழுவை கூட்டவுள்ளாரா ராமதாஸ்?

கடந்த மாதம் நடந்த பாமக பொதுக்குழுவில் அன்புமணியை நீக்கினார் ராமதாஸ். ஆனால் அதற்கு உறுப்பினர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்படவில்லையாம். எனவே, மீண்டும் பொதுக்குழுவை கூட்டி, கட்சியிலிருந்து அன்புமணியை நீக்கியதற்கு ஒப்புதல் பெறும் தீர்மானத்தை நிறைவேற்ற ராமதாஸ் முடிவு செய்துள்ளார் என அவருடைய தரப்பினர் கூறிகின்றனர். இந்த பொதுக்குழு அக்டோபர் முதல் வாரத்தில் நடக்கலாம் என கூறப்படுகிறது.
News September 21, 2025
விலை குறைந்தது…

IRCTC சார்பில் ரயில்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் வாட்டர் பாட்டில் விற்கப்படுகிறது. GST வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதை அடுத்து, ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ₹15லிருந்து ₹14-ஆகவும், அரை லிட்டர் பாட்டில் ₹10லிருந்து ₹9-ஆகவும் IRCTC குறைத்துள்ளது. எனவே, இனி ரயில்களில் பயணிப்போர் கூடுதல் விலை கொடுத்து வாட்டர் பாட்டிலை வாங்க வேண்டாம்; ஒரு லிட்டர் வாட்டருக்கு ₹14 கொடுத்தாலே போதும்.
News September 21, 2025
சூர்யகுமார் யாதவ் செய்ததில் தவறில்லை: கங்குலி

ஆசிய கோப்பையில், IND vs PAK போட்டியின்போது, பாக்., வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது சர்ச்சையானது. இந்நிலையில், பாக்., கேப்டனுடனோ (அ) வீரர்களுடனோ கைகுலுக்காமல் செல்வது சூர்யகுமார் யாதவின் தனிப்பட்ட விருப்பம் என்று கங்குலி தெரிவித்துள்ளார். இதில் தவறொன்றுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, இந்த விவகாரத்தை ICC-யிடமும் பாக்., கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ளது.