News October 24, 2025
திமுக கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை: நயினார்

சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை அறிக்கை விட்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இப்படிப்பட்டவர்களின் அரசால், தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News October 25, 2025
ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ODI போட்டிகளிலும் தோற்று, இந்தியா தொடரை இழந்தது. இந்நிலையில் இன்று சிட்னியில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஆறுதல் வெற்றியாவது பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தியா பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சுமாராக செயல்பட்டதே தோல்விக்கு காரணம். முக்கியமாக விராட்டின் பார்ம் அவுட் அணிக்கு பின்னடைவாக மாறியது. இன்றைய போட்டியில் குல்தீப்புக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
News October 25, 2025
எடுத்த காரியத்தில் வெற்றி பெற..

சனிக்கிழமை மட்டுமின்றி, தினமும் 21 முறை இந்த அனுமன் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள்.
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ ஆஞ்சநேய
கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே. அர்த்தம்:
‘ராமனின் தூதனாகிய, மிகுந்த வீரமுள்ள, ருத்ரனின் சக்தியுடன் பிறந்த, ஆஞ்சநேயரே, வாயு புத்திரனே, உமக்கு வணக்கம். SHARE IT.
News October 25, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைகிறார்

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, அன்புமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். பின்னர், ராமதாஸையும் சந்தித்து பேசியிருந்தார். இதனிடையே, ‘மாம்பழம்’ சின்னமும் அன்புமணியின் வசம் வந்துள்ள நிலையில், வெற்றி வாய்ப்புள்ள 30 தொகுதிகளை அவர் பட்டியலிட்டு லிஸ்ட்டையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


