News April 30, 2024
குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்த அறிகுறி இல்லை

புதுக்கோட்டை சங்கம்விடுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததற்கான அறிகுறி இல்லையெனத் திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், ‘தண்ணீரில் ஈகோலி என்ற பாக்டீரியா இல்லாததால், அதில் எந்தக் கழிவும் கலக்கப்படவில்லை. தண்ணீர்த் தொட்டி நீண்ட நாள் கழுவப்படாததால் சேர்ந்த பாசியைச் சிலர் தவறாகக் கூறியுள்ளனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
இன்ஜினியரிங்கில் AI கட்டாயம்: அண்ணா பல்கலை

நடப்பு கல்வியாண்டு (2025 – 2026) முதல் அண்ணா பல்கலைக்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளில், BE படிப்புகளில் டேட்டா சயின்ஸ், AI பாடத்திட்டங்கள் நேரடி பயிற்சியுடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆங்கில மொழியுடன் ஜெர்மன், ஜப்பான் (அ) கொரிய மொழிகளில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும். Emotional Intelligence, Positivity ஆகியவற்றை கற்கும் வகையில் உடற்கல்வி பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
தமிழ்நாடு முழுவதும் கட்டுப்பாடு அமல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்து வழிபாடு செய்ய காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தடையில்லா சான்று பெற்று விநாயகர் சிலையை நிறுவ வேண்டும். பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை நிறுவ கூடாது. சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள், கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
News August 27, 2025
BREAKING: ஓய்வு பெற்றார் அஸ்வின்

IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் அஸ்வின் சற்றுமுன் அறிவித்துள்ளார். 2009-ல் CSK அணிக்காக களமிறங்கிய அவர், RR, DC உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி, 187 (IPL) விக்கெட்டுகள், 833 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றிருந்தார். கடந்த IPL சீசனில் CSK-வில் இடம்பெற்ற அவர், சரியாக விலையாடவில்லை என சர்ச்சை எழுந்தது.