News March 16, 2025
பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: மெக்வால்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அறிமுகப்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் மெக்வால் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது, அதை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 1952, 1957, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற, சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 18, 2025
தினம் ஒரு ஜூஸ்… எப்போதும் ஃபிரஷ்

*பச்சை காய்கறி சாறு உடலுக்கு வலிமை தருவதுடன், புற்றுநோய் அபாயத்தை தடுக்கும்.
*மாதுளம் பழச்சாறு ரத்த சோகையை நீக்குவதுடன், உடலுக்கு உடனடி ஆற்றல் தரும்.
*நெல்லிக்காய் ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தைத் தூண்டும்.
*பன்னீர் திராட்சை ஜூஸ் உடலில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும்.
*பிளம் ஜூஸ் வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கும்.
News March 18, 2025
இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 18) அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News March 18, 2025
67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் புதிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (LTTE), லஷ்கர்-இ-தொய்பா, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை உள்ளிட்ட 67 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காகவும் மேற்கண்ட அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.