News June 14, 2024
மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்தார். இந்நிலையில், விரிவான தேர்தல் முடிவுகள் குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டதால், ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது என விளக்கமளித்தனர். தேர்தல் ஆணையமே விரும்பினாலும் அது முடியாது என்றும் அவர்கள் கூறினர்.
Similar News
News March 1, 2026
கடலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் தேர்வு!

US – இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலி அலிரேஸா நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். தற்போது அவர் நிபுணர்கள் சபையின் துணைத் தலைவராகவும், ஈரானின் மதக்கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
News March 1, 2026
BREAKING: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியிலும் தோல்வியை தழுவி இந்திய மகளிர் அணி(0-3) வாஷ் அவுட் ஆகியுள்ளது. அலிசா ஹீலியின்(158) அதிரடியால் 409 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது. இமாலய இலக்கை சேஸ் செய்த இந்தியா தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசியில் 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


