News May 12, 2024
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை

தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. சொத்து வரி, மின்சாரக் கட்டணம் உயர்வு என மக்களுக்கு துன்பத்தை மட்டுமே திமுக அரசு வழங்கியிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Similar News
News February 12, 2026
டிகிரி போதும்.. வங்கியில் ₹48,000 சம்பளம்!

தமிழகம் & பாண்டிச்சேரியில் SBI வங்கியில் 165 Circle Based Officers காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 21- 30 *கல்வித்தகுதி: Engineering, Medicine, Cost accounting, Chartered accounting *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் & உள்ளூர் மொழித் திறன் தேர்வு * பிப்.18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹48,480 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News February 12, 2026
வாக்காளர்களே ரெடியா.. ECI அறிவித்தது

தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, EVM & VVPAT இயந்திரம் பயன்படுத்துவது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ECI அறிவித்துள்ளது. இதற்காக கலெக்டர், சப்-கலெக்டர் & வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்களில் செயல்முறை விளக்க மையங்கள் மற்றும் நடமாடும் செயல் விளக்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
News February 12, 2026
யார் துரோகி என்று மக்களுக்கு தெரியும்: GK மணி

<<19100878>>முக்கியமான துரோகி<<>> என அன்புமணி வைத்த விமர்சனத்துக்கு GK மணி பதிலடி கொடுத்துள்ளார். ராமதாஸுடன் இருப்பதால் துரோகிகள் என்று அநாகரிகமாக, அவதூறாக பேசுவது நல்லதல்ல என எச்சரித்துள்ளார். தான் யாருக்கும் மனதார கெடுதல் நினைப்பவன் அல்ல என கூறிய அவர், துரோகியாக இருந்திருந்தால் ராமதாஸுடன் இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். யார் துரோகி என்று மக்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.


