News March 14, 2025

‘டாஸ்மாக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை’

image

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் டெண்டரில் எந்த ஊழலும், முறைகேடும் நடைபெறவில்லை. தமிழக அரசுக்கு எதிராக ED-ஐ மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஏவியுள்ளது. எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 14, 2025

நடிகையின் ஜாமின் மனு தள்ளுபடி

image

துபாயில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தியதாக கைதான நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஜாமின்கோரி, பொருளாதார குற்றங்களுக்கான கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை இன்று பரிசீலித்த கோர்ட், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தருண் கொண்டுருவின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

News March 14, 2025

மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் அறிவிப்பு

image

தமிழக பட்ஜெட்டில் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் பங்களிப்பான ரூ.1,500 மற்றும் மாநில அரசின் கூடுதல் பங்களிப்பான ரூ.6,500 என மொத்தம் ரூ.8,000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக மீட்கப்படாத விசைப் படகுகளுக்கான நிவாரணம் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

News March 14, 2025

மீனவர்களுக்கான சூப்பர் அறிவிப்புகள்!

image

தமிழக பட்ஜெட்டில் மீனவர்களுக்காக பல்வேறு அசத்தலான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. •கடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க ஆய்வுத் திட்டங்கள் •இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு தினசரி நிவாரணம் ரூ. 500. •இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கான நிவாரண தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன.

error: Content is protected !!